1521. | ‘வானோர் கொள்ளார்; மண்ணவர் உய்யார்; இனி, மற்று என் ஏனோர் செய்கை? யாரொடு நீ இவ் அரசு அள்வாய் யானே சொல்ல, கொள்ள இசைந்தான்; முறையாலே தானேநல்கும் உன் மகனுக்கும் தரை’ என்றான் |
‘வானோர் கொள்ளார் - ‘இராமனைக் காட்டுக்குத் துரத்தி விட்டுப்
பரதன் அரசாள்வதைத்தேவர்களும் எற்றுக் கொள்ளார்; மண்ணவர்
உய்யார் - மண்ணுலகத்தவர் எவரும் உயிர்வாழார்; இனி மற்று ஏனோர்
செய்கை என் - இனிமேல் பிறர் செய்கையைப் பற்றிச்
சொல்லவேண்டுவது என்ன?; நீ இவ் அரசு யாரொடும் ஆள்வாய் -
(அவ்வாறாயின்) நீஇந்த அரசினை யாரோடிருந்து ஆட்சி புரிவாய்?; யானே
சொல்ல - நானே அவனை அரசேற்குமாறுசொல்ல; கொள்ள
இசைந்தான் - ஏற்றுக்கொள்ள உடன்பட்டான்; முறையாலே - முறைப்படி;
உன் மகனுக்கும் தானே தரை நல்கும் - உன் பிள்ளைக்கும் தானே
நாட்டைக்கொடுப்பான்;’ என்றான் -.
யான் வற்புறுத்த இராமக் அரசினை ஏற்க இசைந்தான்; அவன் ஆசை
கொண்டு முயலவில்லை.பரதன் நாட்டைப் பெறுவதற்காக இராமனைக்
காட்டிற்குத் துரத்த வேண்டுவதில்லை. நீ விரும்பினால்தானாகவே பரதனுக்கு
நாட்டை அளித்துவிடுவான். அப்பொழுது முறைகேடு யாதும் நேராது
என்றான்தயரதன். எங்ஙனமாவது இராமன் காடு செல்வதைத் தவிர்க்க
வேண்டும் என்று கருதினான். வானோரையும்மண்ணில் வாழ்வோரையும்
முற்கூறினமையின் ஏனோர் என்றது பிற மக்களையும் கீழுலகத்தவரையும்
குறித்தது.
31
1522. | ‘ “கண்ணே வேண்டும்” என்னினும் ஈயக் கடவேன்; என் உள் நேர் ஆவி வேண்டினும், இன்றே உனது அன்றோ? - பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! - பெறுவாயேல், மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும் மற’ என்றான். |
மானே -வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே!; கண்ணே
வேண்டும் என்னினும் - என்கண்களையே (நீ)வேண்டும் என்றாலும்;
ஈயக் கடவேன் - கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன்; என் உள்நேர்
ஆவி வேண்டினும் - எனது உடலின் உள்ளே நிலவும் உயிரை
விரும்பினாலும்; இன்றேஉனது அன்றோ - இப்பொழுதே உன் வசமுள்ள
தல்லவா?; பெறுவாயேல் - வரத்தைப் பெறவிரும்புவாயானால்; மண்ணே
கொள்நீ - நாட்டை மட்டும் பெற்றுக் கொள்வாய்; மற்றையது ஒன்றும்
மற - மற்றொரு வரத்தை மட்டும் மறந்துவிடு;’ என்றான் -.
பெண்களுக்குரிய இரக்கம் உன்பால் இருக்க வேண்டுவதன்றோ
என்னும் குறிப்போடு ‘பெண்ணே’ என்றும், உன் தந்தையின் வள்ளன்மை
உனக்கும் இருத்தல் வேண்டுமன்றோ என்னும் கருத்தோடு ‘வன்மைக்
கேகயன் மானே’ என்றும் கூறினான். கண்ணிற் சிறந்த உறுப்பு
இல்லையாதலின் அதனையும், அக்கண்ணிற் சிறந்தது உயிராதலின்
அதனையும் தருவதாகச் சொன்னான். உனது - குறிப்பு வினைமுற்று.
மற்றையது- இராமனைக் காட்டிற்கு அனுப்புதல். அதனை வாயாற்
சொல்லவும் அஞ்சி இவ்வாறு கூறினான். 32
1523. | ‘வாய் தந்தேன் என்றே; இனி, யானோ அது மாற்றேன்; நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே; தாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண் பேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ?’ |
தந்தேன் என்றசொல்லிவிட்டேன்; இனி அது மாற்றேன் - இனி அதனைத்
தவறமாட்டேன்; என்னை நோய்தந்து - எனக்கு வருத்தத்தைத் தந்து;
நோவன செய்து - துன்புறத் தக்கவற்றைப் புரிந்து; நுவலாதே - (மேலும்)
அத்தகைய சொற்களைச் சொல்லாதே; தன்னை இரந்தால் -தன்னை
ஒருவர் இரந்து வேண்டினால்; தாய் தந்து என்ன - தாய் மனம் இரங்கித்
தருவதுபோல; தழல்வெம் கண் பேய் - நெருப்புப் போலும் கொடிய
கண்களையுடைய பேயும்; தந்தீயும் - கொடுக்கும்; நீ இது தந்தால் - நீ
(யான் வேண்டும்) இதனைத்தருவாயானால்; பிழை ஆமோ- தவறாகுமோ?’
இரந்து கேட்டால் பேயும் தாய்போல இசையும் என்றால் பரதனுக்குத்
தாயாகிய நீ இசைதல்தவறாகுமோ? என்றான். பேய் என்பதன்பின் இழிவு
சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. தந்தீயும்- தரும்; வினைத்
திரிசொல். 33
கைகேயி மறுக்கத் தயரதன் மீண்டும் இரத்தல்
1524. | இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்; தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள், ‘முன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முன்வாயேல், என்னே? மன்னா! யார் உளர் வாய்மைக்கு இனி?’ என்றாள். |
இன்னே இன்னேபன்னி இரந்தான் - இவ்வாறாகப் பலமுறை சொல்லி
வேண்டினான்; தன் நேர் இல்லாத்தீயவள் - தனக்கு நிகரில்லாத
தீயவளான கைகேயி; உள்ளம் தடுமாறாள் - மனம்சிறிதும் இரங்கினாள்
அல்லள்; மன்னா - அரசே; இவ் வரம் முன்னே தந்தாய்
இந்த வரங்களை முன்னர் வாயால் தந்துவிட்டாய்; நல்காய் - இப்போது
செயற்படுத்தமாட்டாய்; முனிவாயேல் - கோபிப்பாயானால்; என்னே -
என்னாவது?; வாய்மைக்கு இனி யார் உளர் - இனிமேல் வாய்மையைக்
காப்பாற்றுதற்கு யார்இருக்கின்றார்?;’ என்றாள் -.
தன் கணவன் எவ்வளவு இரந்து வேண்டியும் இரங்காமையின் ‘தன்
நேர் இல்லாத் தீயவள்’ என்றார்.‘தீயவை யாவையினும் சிறந்த தீயாள்’ (1504)
என்று முன்னர்க் குறித்தமை கருதத்தக்கது. நல்காய்என்பதனை
முற்றெச்சமாக்கிச் செயற்படுத்தாமல் என்றும் பொருள் கொள்ளலாம்.
‘மன்னா? யார்உளர் வாய்மைக்கு இனி’ என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 34
1525. | அச் சொல் கேளா, ஆவி புழுங்கா, அயர்கிண்றான், பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன், பொறை கூர, ‘நச்சுத் தீயே பெண் உரு அன்றோ?’ என, நாணா, முச்சு அற்றார்போல், பின்னும் இரந்தே மொழிகின்றான்; |
வாய்மொழி மன்னன்- உண்மை மொழிகளைப் போற்றும் தயரதன்; அச்
சொல் கேளா - அந்தச் சொற்களைக்கேட்டு; ஆவி புழுங்கா - உயிர்
வெதும்பி; அயர்கின்றான் - சோர்ந்து; பொறை கூர - முன்னிலும்
பொறுமை மேலிட; நச்சுத் தீயே பெண் உரு அன்றோ’ என -
‘(கொல்லும் தன்மையுள்ள) நஞ்சும், தீயுமே இப்பெண்ணின் தோற்றமாக
வந்துள்ளனவன்றோ’ என்றுஎண்ணி; நாணா- வெட்கமுற்று; முச்சு அற்றார்
போல் - மூச்சு அடங்கியவரைப்போல இருந்து; பின்னும் இரந்தே
மொழிகின்றான் - மேலும் இரத்தலை மேற்கொண்டேபேசுகின்றான்.
இது, கைகேயியின் இகழ்ச்சிக் சொல் கேட்ட தயரதன் உற்ற
சோகத்தையும் தொடர்ந்து வேறுவழியின்றி அவனிடம் இரந்து நிற்றலையும்
கூறுகிறது. பேணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.கேளா, நாணா -
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். கூர்- உள்ளது சிறத்தலாகிய
குறிப்புணர்த்தும் உரிச்சொல். மூச்சு - மூச்சு என்பதன் குறுக்கல் விகாரம். 35
1526. | ‘நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம். உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்; |
என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடு இறவாமை நய’ என்றான். |
நீ இனிதுஆள்வாய் - நீ இன்பமாக அதிகாரம் செலுத்துவாய்; நிலம்
எல்லாம் - மண்ணுலகம்முழுதும்; உன் வயம் ஆமே - உன்
வழிப்பட்டதாக ஆகும்; ஆளுதி - ஆட்சிபுரிவாய்;தந்தேன் -
கொடுத்தேன்; உரை குன்றேன் - பேச்சுத் தவறமாட்டேன்; என்மகன் -
எனக்கு மகனும்; என் கண் - எனக்குக் கண்போன்றவனும்; என் மகன் -
அனைத்து உயிர்களுக்கும் சிறந்த பிள்ளை போன்றவனுமான இராமன்;
இந்த நாடு இறவாமை -இந்த நாட்டை விட்டு வெளியேறாமை மட்டும்;
நய - விரும்பிடுவாய்;’ என்றான் -.
இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின்
மிகுதியையும், இராமன்சிறப்பையும் தெரிவிக்கிறது. ‘உன் உயிர்க்கு என
நல்லன் மன்னுயிர்க்கு எலாம்’ (1350) எனவசிட்டன் உரைத்தது ஒப்பு
நோக்கத்தக்கது. 36
1527. | ‘மெய்யே; என்தன் வேர் அற நூறம் வினை நோக்கி நையாநின்றேன், நாவும் உலர்ந்தேன்; நளினம்போல் கையான், இன்று, என் கண் எதிர்நின்றும் கழிவானேல், உய்யேன்; நங்காய்! உன் அபயம் என் உயிர்’ என்றான். |
கெடும்படிஅழிக்கும்; வினைநோக்கி - எனது தீவினையை எண்ணி; நையா
நின்றேன் - வருந்துகின்றேன்; நாவும் உலர்ந்தேன் - (உன்னோடு பேசிப்
பேசி) நாக்கும் வறளப் பெற்றேன்; இன்று - இந்நாளில்; நளினம் போல்
கையான் - தாமரை போலும் கைகளையுடைய இராமன்;என் கண்
எதிர்நின்றும் கழிவானேல் - என் பார்வையினின்று நீங்கிக் காடு
செல்வான்என்றால்; உய்யேன் - யான் பிழைத்திருக்கமாட்டேன்;
நங்காய் - (ஆதலால்)பெண்ணே!; என் உயிர் உன் அபயம் -
என்னுடைய உயிர் உன் அடைக்கலம் ஆகும்’; என்றான்-.
தயரதன் இராமன் காடு சென்றால் தன் உயிர் நீங்கிவிடும் என்பதனைத்
தெரிவித்துத் தன்னைக்காத்திடுமாறு கைகேயியை வேண்டினான். 37
கைகேயி ‘வரத்தைத் தவிருமாறு கூறுதல் அறமோ?’ எனல்
1528. | இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளான். முனிவு எஞ்சாள், மரம்தான் என்னும் நெஞ்சினள், நாணாள், வசை பாராள், ‘சரம் தாழ் வில்லாய்! தந்த வரத்தைத் “தவிர்க்” என்றல், உரம்தான் அல்லால், நல் அறம் ஆமோ? உரை’ என்றாள். |
பால் குறையிரந்துசொல்லும் இனிய சொற்களைக் கேளாதவளும்; முனிவு
எஞ்சாள் - கோபம் தணியாதவளும்; மரம்தான் என்னும் நெஞ்சினள் -
மரம் என்று சொல்லத்தக்க வன்மையான மனத்தைக் கொண்டவளும்;
நாணாள் - வெட்கம் இல்லாதவளும்; வசை பாராள் - பழியைப் பற்றிக்
கவலைப்படாதவளுமானகைகேயி; ‘சரம் தாழ் வில்லாய் - (தயரதனைத்
பார்த்து) ‘அம்புகள் தங்கும் வலியவில்லையுடையே அரசே!; தந்த
வரத்தைத் ‘தவிர்க’ என்றல் - முன்பு கொடுத்த வரத்தை விட்டுவிடு
என்று வேண்டுவது; உரம்தான் அல்லால் - மன வலிமையேயன்றி; நல்
அறம் ஆமோ உரை -நல்ல தருமம் ஆகுமோ சொல்லாய்;’ என்றாள்-.
கைகேயியின் வலிய நெஞ்சுக்கு மரத்தை உவமையாகச் சொன்னார் -
திருத்தற்கு அரிதாதலின்.இரும்பாயின் நெருப்புக்கு இளகும்; மரமோ
சாம்பலாகுமோ தவிரநெகிழாது. கைகேயி நெகிழாமல் நின்றமை
உணர்த்தப்பட்டது கொள்ளாள், நெஞ்சினள், நாணாள், பாராள் -
வினையாலணையும் பெயர்கள். 38
மண்ணில் விழுந்து, மன்னன் புலம்புதல்
1529. | கொடியாள் இன்ன கூறினள்; கூற, குல வேந்தன், ‘முடி சூடாமல் வெம்பரல் மொய் கானிடை, மெய்யே நெடியான் நீங்க, நீங்கும் என் ஆவி இனி’ என்னா, இடி ஏறுண்ட மால் வரைபோல், மண்ணிடை வீழ்ந்தான். |
கொடியாள் - கொடியவளான கைகேயி; இன்ன கூறினள் -
இப்படிப்பட்டவற்றைச்சொன்னாள்; கூற - சொல்ல; குல வேந்தன்
- சிறந்த மன்னர் மன்னனாகிய தயரதன்; இனி - இனிமேல்; நெடியான் -
இராமன்;முடிசூடாமல் - மகுடம் சூட்டிக்கொள்ளாமல்; வெம்பரல் மொய்
கானிடை நீங்க - கொடிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டில்
உறையச்செல்ல; மெய்யே என் ஆவி நீங்கும் என்ன- உண்மையாக
என் உயிர் பிரியும் என்றும் சொல்லி; இடி ஏறுண்ட மால்வரை போல -
இடியினை ஏற்ற பெரிய மலையைப்போல; மண்ணிடை - பூமியில்;
வீழ்ந்தான் -சாய்ந்தான்.
திருமாலாதலின் இராமன் நெடியோன் என்று குறிக்கப்பெற்றான்.
ஏறுண்ட - தாக்கப்பட்ட; ‘இடிஏறு உண்ட’ எனப் பிரித்தும் ‘பேரிடி வீழ்ந்த’
எனப் பொருள் உரைப்பாரும் உண்டு. ‘காத்தலும்’என்ற பாடத்தினும்
‘வெம்பரல்’ என்று பாடமே சரி.
39
1530. | வீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின் கடல் வெள்ளத்து ஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு ஓர் கரை காணான்; சூழ்ந்தாள் துன்பம் சொற் கொடியாள், சொல்கொடு நெஞ்சம் போழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான். |
வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து - கொடிய துயரமாகிய கடலின்
வெள்ளத்தில்; ஆழ்ந்தான்- அமுந்தினான்; ஆழா - அழுந்தி;
அக்கடலுக்கு ஓர் கரை காணான் - அந்தக்கடலுக்கு ஒர் எல்லை
காணாதவன் ஆனான்; துன்பம் சூழ்ந்தாள் - தனக்குப் பெருந்துன்பத்தைச்
சூழ்ந்துகொண்டவளும்; சொல் கொடியாள் - கொடிய
சொற்களையுடையவளும்; சொல்கொடுநெஞ்சம் போழ்ந்தாள் - தன்
பேச்சால் மனத்தைப் பிளந்தவளுமான கைகேயியின்; உள்ளன்புன்மையை
நோக்கிப் - மனத்தின் சிறுமையை எண்ணி; புலர்கின்றான் -
வாடுகின்றான்.
துயரத்தைக் கடலாக உருவகித்ததற்கு ஏற்பக் ‘கரை காணான்’ என்றார்.
வீழ்ந்தான் - வினைமுற்று.சூழ்ந்தாள், கொடியாள், போழ்ந்தாள் -
வினையாலணையும் பெயர்கள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen