Sonntag, 22. April 2018

3.திருக்குறள் -2

2)சொல்வன்மை 

 640
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் 
யாநலத்து உள்ளதூஉம் அன்று. 

641 
 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் 
 காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 

642 
 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 
 வேட்ப மொழிவதாம் சொல்.

 643 
 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
 பொருளும் அதனினூஉங்கு இல். 

644 
 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை 
 வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 

645 
 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் 
 மாட்சியின் மாசற்றார் கோள். 

646 
 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
 இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 

647 
 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது 
 சொல்லுதல் வல்லார்ப் பெறின். 

648 
 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற  
சிலசொல்லல் தேற்றா தவர். 

649 
 இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது 
 உணர விரித்துரையா தார். 

Keine Kommentare:

Kommentar veröffentlichen