Dienstag, 10. Juli 2018

8.தேம்பாவணி -6

 வெண்மை செறிந்த மலரின் அழகு போல் தூயவளாகிய கன்னி
மரியாள் கையில் ஞானம் நிறைந்து மலர்ந்துள்ள மகனை நோக்கும்
பொருட்டு, வானமெங்கும் நெருங்கப் பூத்த அழகு போலத் தாங்கி நின்ற
பல விண்மீன்கள் செறிந்து கிடந்து, அழகுடன் விரிந்த கண்களை
ஒத்திருந்தன.

     மிடைந்த + அலர் - 'மிடைந்தவலர்' என்பது 'மிடைந்தலர்' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது. 'அலர் சேடு கண்' என்பதனை, 'சேடு
அலர் கண்' என மாற்றிக் கூட்டுக.



            31
மனவ ணங்குவ ணங்கடி நாயகன்
மனவ ணங்குவ ணங்கில்வ ருந்தினார்
மனவ ணங்குவ ணங்கலி லாளனு
மனவ ணங்குவ ணங்கும ணங்குமே.

மனவு அணங்கு வணங்கு அடி நாயகன்
மன் அவ் அணங்கு வணங்கு இல் வருந்தினார்,
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும்,
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே.


     தன் மனத் துயரம் அடங்குதல் இல்லாத கணவனாகிய சூசையும்,
மணியின் அழகும் தோற்று வணங்கும் தெய்வப் பெண் போன்ற
மரியாளும், நவமணிகள் தம்மிலும் அழகியதென்று வணங்கும் திருவடிகளை
உடைய ஆண்டவன்பால் நிலைகொண்ட அத்துன்பங்கள் குறையாமை
கண்டு வருந்தினர்.


  மன் + அ + அணங்கு - 'மன்னவ் வணங்கு
என வரவேண்டியது,
ஈரெழுத்துக்கள் இடையிட்டுத் தொக்கமையால் தொகுத்தல் விகாரம்


            32

ஆர ணந்தரு மாண்டகை யாகுலக்
கார ணந்தரு கட்புனல் கண்டிடர்
பூர ணந்தரு மார்புபு டைத்தெலா
வார ணந்தரும் வானுறக் கூக்குரல்.

ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலக்
காரணம் தரு கண் புனல் கண்டு, இடர்
பூரணம் தரு, மார்பு புடைத்து, எலா
வாரணம், தரும் வான் உறக் கூக்குரல். 

   வேதத்தை வகுத்துத் தரும் ஆண்டவனுக்கு உற்ற துயரத்தின்
காரணமாக இவர்கள் இடும் கண்ணீரைக் கண்டு, தாமும் அத்துன்பத்தை
முற்றும் உணர்ந்ததை அறிவிக்கும் முகமாக, அங்குள்ள எல்லாக்
கோழிகளும், தம் மார்புகளைச் சிறகுகளால் புடைத்துக்கொண்டு,
வானத்தை எட்டுமாறு கூக்குரல் எழுப்பிக் கூவும்.


              33
பேர்ந்த தன்பெரு மானடை பீழைவா
னோர்ந்த தன்மையு ளைந்தழு தாலென
வார்ந்த தண்பனி தாரையின் மல்கியன்
றார்ந்த பைந்தழைக் காவழு தாயதே.
பேர்ந்த தன் பெருமான் அடை பீழை வான்
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என,
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று,
ஆர்ந்த பைந் தழைக் கா அழுது ஆயதே.
   
     தன்னை விட்டுப் பெயர்ந்து மண்ணுலகம் அடைந்த தன் ஆண்டவன்
அடையும் துன்பத்தை வானம் உணர்ந்து கொண்ட தன்மையாக வருந்தி
அழுதாற்போல, அன்று வடித்த குளிர்ந்த பனியாகிய கண்ணீர் மழைத்
தாரைபோல் மிகுதியாகப் பெய்து, நிறைந்த பசுமையான இலைகளைக்
கொண்டுள்ள காடும் அழுதது போல் ஆயிற்று.

     பசுமை + தழை - பைந்தழை.

             34
கறாக றாவெனக் காடைக லுழ்ந்தன
ஞறாஞ றாவெனத் தோகைக ணைந்தழும்
புறாகு றாவுத லோடிவர் போதலா
லறாந றாப்பொழி லாரழு மோதையே.
கறாகறா எனக் காடை கலுழ்ந்தன;
ஞறாஞறா எனத் தோகைகள் நைந்து அழும்;
புறா குறாவுதலோடு, அவர் போதலால்,
அறா நறாப் பொழில் ஆர் அழும் ஓதையே.


     இவர்கள் தம்மைவிட்டுப் பிரிந்து போதலால், காடைகள்
கறாகறாவென்று அழுதன; மயில்கள் வருந்தி ஞறாஞறாவென்று அழும்;
புறாக்கள் குறாகுறாவென்று அழுவதனோடு, அவையும் சேர்ந்து, என்றும்
அறாத தேனைக்கொண்டுள்ளசோலை, நிறைந்த ஓசையோடு அழும்.

     ஒப்பு நோக்குக 1 : 45.


     35
கிளிய ழக்குயில் கேட்டழத் தேனுணா
தளிய ழச்சிறை நைந்தழ வாவென
வளிய ழத்துயர் மல்கிவ னத்தெலா
வுளிய ழத்தக வோரழ வேகினார்.
கிளி அழ, குயில் கேட்டு அழ, தேன் உணாது
அளி அழ, சிறை நைந்து அழ, ஆ! என
வளி அழ, துயர் மல்கி வனத்து எலா
உளி அழ, தகவோர் அழ ஏகினார்.
 
     கிளிகள் அழவும், அதனைக் கேட்டுக் குயில்கள் அழவும், தேனை
உண்ணாமல் வண்டுகள் அழவும், அன்னங்கள் நைந்து அழவும், ஆ! என்று
காற்று அழவும், துயரம் மிகுந்து அவ்வனத்தின் எல்லா இடங்களும்
அழவுமாக, பெருமை வாய்ந்த அவர்கள் அழுது கொண்டே சென்றனர்.
'சிறை' என்பது சிறகுகளை உடைய அன்னத்திற்குக் காரண இடுகுறிப் பெயர்.



           36
கான்ம றந்தன காமல ரன்னதே
தேன்ம றந்தன தேனின மன்னதே
பான்ம றந்தன மான்பற ழன்னதே
யான்ம றந்தன தம்பிள்ளை யன்னதே.
கான் மறந்தன கா மலர், அன்னதே;
தேன் மறந்தன தேன் இனம், அன்னதே;
பால் மறந்தன மான் பறழ், அன்னதே;
ஆன் மறந்தன தம் பிள்ளை, அன்னதே.


     அதுபோலவே, காட்டிலுள்ள மலர்கள் வாசனை வீச மறந்தன;
அதுபோலவே, வண்டினங்கள் தேனை உண்ண மறந்தன; அதுபோலவே,
மான் குட்டிகள் பால் அருந்த மறந்தன; அதுபோலவே, பசுக்கள் தம்
கன்றுகளை மறந்தன.



37
சுருதி யேந்துசு தற்றுமிப் பேனெனக்
கருதி யேந்துகு ரோதங்க தித்தெனப்
பருதி யேந்துப டம்பட ராமுனர்
குருதி யேந்துகு ணக்குசி வந்ததே.

சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என,
கருதி ஏந்து குரோதம் கதித்து என,
பருதி ஏந்து படம் படரா முனர்,
குருதி ஏந்து குணக்கு சிவந்ததே.


     வேதத்தைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த மகனைக்
கொல்லுவேனென்று எரோதன் திட்டமிட்டுத் தன் மனத்தில் கொண்டிருந்த பகையை வானம் கண்டு சினந்தாற்போல, ஆதவன் 

தாங்கிக் கொண்டிருந்த இருளாகிய போர்வை விலகுவதற்கு முன்னரே, இரத்தம் பாய்ந்த தன்மையாய் அதன் முகமாகிய கீழ்த்திசை சிவந்தது.பகைக்கு மனமும், சினத்திற்கு வானமும், போர்வைக்கு இருளும், கிழக்கிற்கு முகமும் வருவித்து உரைக்கப்பட்டன.

சுதன் + துமிப்பேன் என்பது, 'சுதனைத் துமிப்பேன்' என்ற பொருளில், 'சுதற்றுமிப்பேன்' என 
நின்றது.


               38
முழவெ ழுந்தொனி யொப்பமுந் நீரொலி
யெழுவெ ழுந்துபொ ரக்கதி ரெய்சரம்
விழவெ ழுந்தவெய் யோன்சிவந் தெய்திவா
னழவெ ழுந்துய ராற்றில தோன்றிற்றே.
முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி
எழ, எழுந்து பொரக் கதிர் எய் சரம்
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி, வான்
அழ, எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே.


      அப்பகைவன் மேல் எழுந்து போர் புரிய எய்யும் கதிராகிய அம்புகள் அழுவதைக் கண்டு, தானும் எழுந்த துயரத்தை ஆற்ற மாட்டாததுபோல்


              39
பானும் பானொடு பாசறை பட்டழும்
வானும் வானொடு மண்ணுமி ரங்கின
வேனு மேதுமு ணர்கில மாக்களுங்
கோனுங் கோடணை கொண்டிரங்
காயினார்.


பானும், பானொடு பாசறை பட்டு அழும்
வானும், வானொடு மண்ணும் இரங்கின
வேனும், ஏதும் உணர்கில மாக்களும்
கோனும் கோடணை கொண்டு இரங்காயினார்.

     
கதிரவனும் கதிரவனோடு கூடித் துன்பப்பட்டு அழும் வானமும், அவ்வானத்தோடு சேர்ந்து மண்ணுலகமும் இவர் நிலை கண்டு இரங்கினவேனும், ஒன்றும் உணர்தல் இல்லாத கீழ் மக்களும் எரோதன் என்ற மன்னனும் மட்டுமே கொடுமை கொண்டு இரங்காதிருந்தனர்.
     
இரங்கார் ஆயினார் என்பது 'இரங்காயினார்' என்று இடையே
குறைந்து நின்றது.

பைதிர நீங்கு படலம் முற்றும்
        

Freitag, 6. Juli 2018

8.தேம்பாவணி -5


                  23
அலைபுறங் கொண்ட ஞாலத் தடரிருள் சீக்க யாக்கை
நிலைபுறங் கொண்ட ஞான நெடுஞ்சுட ரனையான் போகக்
கொலைபுறங் கொண்ட வேந்தன் குணத்துரி நகரு நாடும்
வலை புறங் கொண்ட பாவ மலிந்திருள் மொய்த்த தன்றே.
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் சீக்க, யாக்கை
நிலை புறம் கொண்ட ஞான நெடுஞ் சுடர் அனையான் போக,
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து, உரி நகரும்நாடும்
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து, இருள் மொய்த்தது அன்றே
.


     கடலைப் புறத்தே சூழக் கொண்ட இவ்வுலகத்தில் செறிந்துள்ள
இருளைப் போக்கும் வண்ணம், உடலுள்ள நிலையைப் புறத்தே காட்டி
வந்துதித்த நெடிய ஞானச் சுடர் போன்ற ஆண்டவன் நீங்கிப் போகவே,
கொலையை வெளிப்டையாகவே கொண்ட எரோது மன்னனின்
குணத்தைப் போலவே, அவனுக்குரிய நகரத்திலும் நாட்டிலும் வலையாக
மூடிக்கொண்டது போன்ற பாவம் மலிந்து, இருளே மொய்த்தது.



                 24
கதிதள்ளி யுயர்வா னேற்றுங் கனிந்ததம்  வேந்த னோடும்
பதிதள்ளி யமரர் போகப் பகையுநீண் பசியு நோயு
நிதி தள்ளி மிடியுங் கேடு நிசிதமுந் தீய யாவு
மதிதள்ளி மருட்டும் பேயு மறுகுடி யாயிற் றன்றே
கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும்
பதி தள்ளி அமரர் போக, பகையும் நீண் பசியும் நோயும்
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும்,
மதி தள்ளி மருட்டும் பேயும் மறுகுடி ஆயிற்று அன்றே
.



     உயர்ந்த வானுலகம் முடிவில்லாது போற்றும் கனிவுக்குரிய தம்
அரசனாகிய ஆண்டவனோடு வானவரும் அந்நகரை விட்டு விலகிப்
போகவே, பகையும் நீடித்த பசியும் நோயும் செல்வத்தைப் போக்கிய
வறுமையும் கேடும் இகழ்ச்சியும் தீயன யாவும், வந்து சேர்ந்ததோடு,
அறிவை அகற்றி மயக்கும் பேயும் அங்கு குடியாய் வந்து சேர்ந்தது. 



   25
மணிவளர் முகிற்றண் ணூர்தி வானுடுக் கொடிதண் டிங்க
ளணிவளர் குடைகொண் டெங்கு மருணிழல் மன்னன் போகப்
பணிவளர் நகரு நாடும் பனிப்புறப் பகைத்து வாட்டிப்
பிணிவளர் வினையின் செந்தீப் பிரிவிலா மேய்ந்த தன்றே.
மணி வளர் முகில் தண் ஊர்தி, வான் உடுக் கொடி, தண் திங்கள்
அணி வளர் குடை கொண்டு, எங்கும் அருள் நிழல் மன்னன் போக,
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற, பகைத்து வாட்டி,
பிணி வளர் வினையின் செந் தீ, பிரிவு இலா மேய்ந்தது அன்றே.
 
     நீலமணி போல் விளங்கும் மேகத்தைக் குளிர்ந்த வாகனமாகவும்,
விண்மீனைக் கொடியாகவும், குளிர்ந்த மதியை அழகு பொருந்திய
குடையாகவும் கொண்டு, எங்கும் அருளாகிய நிழலைத் தரும் அரசனாகிய
ஆண்டவன் நீங்கிப் போகவே, அணிகலன் நிறைந்த யூதேய நாடும்
எருசலேம் நகரமும் நடுங்குமாறு, துன்பம் வளர்வதற்குக் காரணமான தீவினையால் வரும் செந்தீ பகைத்து வாட்டி, விலகாமல்
மேய்ந்துகொண்டிருந்தது.

                இயற்கையின் இரக்கம்
     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.


          26
கண்ண கன்ற வகழிக லங்கலிற்
றண்ண கன்றத ரங்கந்த ளம்பலே
யெண்ண கன்றகு ணத்திவர் நின்மினென்
றொண்ண கன்றகை நீட்டின தொத்தவே.
கண் அகன்ற அகழி கலங்கலின்,
தண் அகன்ற தரங்கம் தளம்பலே,
எண் அகன்ற குணத்து இவர், "நின்மின்!"
 என்று,
ஒண் அகன்ற கை நீட்டினது ஒத்தவே
.

     இடம் பரந்த அகழி காற்றில் அசைந்து கலங்குதலால், குளிர்ந்த
அகன்ற அலைகள் கரையில் தளம்பும் தோற்றம், எண்ணுக்கு அடங்காத
குணம் படைத்த இவர்களை, "போகாதே நில்லுங்கள்!" என்று, ஒளி
பொருந்திய நீண்ட கைகளை நீட்டித் தடுப்பதை ஒத்திருந்தது.


   'தளம்பல்' என்ற எழுவாய்க்குரிய 'ஒத்தது' என்ற பயனிலையில் ஈறு 
கெட்டது. பின் இதுபோல் வருவனவும் அமைத்துக் கொள்க. முதலடியின்
இரண்டாஞ்சீர் விட்டிசைத்தற்கண் 'கன்ற' எனத் தேமாவாக நின்று,
வருஞ்சீர் 'வகழிக' எனக் கருவிளமாய் இசை நிறைத்தல் யாப்பமைதிக்குப்
பொருந்துவதெனக் காண்க. இரண்டாமடியின் மூன்றாஞ்சீர் 'ரங்கந்த' எனத்
தேமாங்காயாக நிற்றலும், ஒரு நிரைக்கு இரு நேர் நின்று கருவிளம்
போன்று இசை நிறைத்தலும் காண்க. இதனையும், 'ரங்கந் தளம்பலே' எனச்
சீர் பிரித்து, முதல் விதிக்கு அமையக் கொள்ளுதலும் ஒன்று. முதல் விதியிற்
குறித்த சீர்கள் இரண்டாம் விதிக்கேற்பப் பிரிக்க அமையாமையும் காண்க.



27
அலைய லைந்தலர் கூப்பிய தாமரை
யிலைய லைந்தலை மீதெழுந் தாடலந்
நிலைய டைந்தனர் நீங்கலிர் நின்மினென்
றுலைவ டைந்துகை கூப்பிய தொத்தவே.
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
அலை அலைந்து அலை மீது எழுந்துஆடல், அந்
நிலை அடைந்தனர், "நீங்கலிர்! நின்மின்!" என்று,
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே.
   

இலையோடு கூடி அசைந்து அலைக்குமேல் எழுந்து நின்று ஆடும்
தோற்றம், அவ்விடம்வந்தடைந்த இம்மூவரை "எம்மை விட்டு நீங்காதீர்கள்! நில்லுங்கள்!" என்று, கலக்கம் அடைந்து கை கூப்பித் தடுப்பதை ஒத்திருந்தது.

             28
நாக நெற்றியி னன்மணி யோடைபோ
னாக நெற்றியி னன்மணி யாறுபாய்
நாக நெற்றியி னன்மலர்க் காவப்பா
னாக நெற்றியி னன்மதி தோன்றிற்றே.
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல்,
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய்
நாக நெற்றியின் நன் மலர்க் கா அப்பால்
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே
 

யானையின் நெற்றியில் அணிந்த நல்ல மணிகள் பதித்த பட்டம் போல், மலையின் உச்சியினின்று நல்ல மணிகளைக் கொண்ட ஆறு பாய்ந்தோடுவதும், தன் உச்சியில் நல்ல மலர்களைக் கொண்ட புன்னைமரங்கள் நிறைந்ததுமான சோலைக்கு அப்பால், வானத்தின் நெற்றியில் நல்ல திங்கள் அப்பொழுது உதித்தது.'நெற்றியின் நன் மலர் நாகக்கா' என மாற்றிக் கூட்டுக. 'மதி' பிறைமதி என்பது, வரும் பாடலால் அறிக. 


              29
உறைகி டந்தவிண் வேந்துயி ருண்பலென்
றுறைகி டந்தயி லோங்கர சைப்பகைத்
துறைகி டந்தக டற்பறைக் கோர்குணி
லுறைகி டந்தன வொண்பிறை தோற்றமே.
உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று
உறை கிடந்த அயில் ஓங்கு அரசைப் பகைத்து,
உறை கிடந்த கடல் பறைக்கு ஓர் குணில்
உறை கிடந்து அன, ஒண் பிறை தோற்றமே

     ஒளி பொருந்திய அப்பிறையின் தோற்றம், மழையைக் கொண்டுள்ள விண்ணுலக வேந்தனாகிய குழந்தை நாதனின் உயிரை உண்பேனென்று உறைக்குள் கிடந்த வேலை உருவி உயர்த்திய அரசனைப் பகைத்து, உப்புக்காரம் அமைந்து கிடந்த கடலாகிய பறையை அடித்துப் போர்க்குரல் எழுப்புவதற்கென்று ஒரு குறுந்தடி வானத்தில் கிடந்ததுபோன்று இருந்தது.    
  
கிடந்த + ஆயில் - 'கிடந்தவயில்' என வேண்டியது, 'கிடந்தயில்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.

             30
சிதமி டைந்தலர்ச் சேடனை யாள்கையிற்
சிதமி டைந்தலர் சேடனை நோக்குபச்
சிதமி டைந்தலர் சேடெனத் தாங்குபற்
சிதமி டைந்தலர் சேடுகண் ணொத்தவே.
சிதம் மிடைந்த அலர்ச் சேடு அனையாள் கையில்
சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப,
சிதம் மிடைந்து அலர் சேடு எனத் தாங்கு பல்
சிதம் மிடைந்து, அலர் சேடு கண் ஒத்தவே. 

Montag, 2. Juli 2018

8.தேம்பாவணி -4

   17
மருந்தடக் கனிமுக மகிழ்ந்து நாயக
னருந்தடத் தவர்க்குநல் லருளோ டாசியைத்
தருந்தடத் திவர்ந்திருட் புதைத்த சாமத்தாங்
கிருந்தடத் தேகுதற் கெழுந்து போயினார்.
மருந்து அடக் கனி முகம் மகிழ்ந்து நாயகன்,
அருந் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியைத்
தரும் தடத்து இவர்ந்து, இருள் புதைத்த
சாமத்து, ஆங்கு
இருந் தடத்து ஏகுதற்கு, எழுந்து போயினார்.


     அமுதத்தையும் வென்ற தன்மையாய் ஆண்டவனாம் அப் பாலன்
கனிந்த முகம் காட்டி மகிழ்ந்து, அரிய பெருமையாய் நல்ல அருளோடு
ஆசியை அவர்களுக்குத் தரும் மாண்பினால் அவர்கள் எழுச்சி கொண்டு,
அங்கிருந்து நெடிய வழித் தடத்திற் செல்வதற்கு இருள் கவிந்த நள்ளிரவில்
எழுந்து போயினர்.



             18
இருச்சுட ரோன்பட வீரை யாயிரங்
குருச்சுடர் மேனியைக் கொண்ட வானவர்
திருச்சுட ரோனெனச் சிறுவன் றாளிணை
பருச்சுடர் பாய்ந்துறப் பணிந்து தோன்றினார்.
இருச் சுடரோன் பட, ஈர் ஐயாயிரம்,
குருச் சுடர் மேனியைக் கொண்ட வானவர்,
திருச் சுடரோன் என் அச் சிறுவன் தாள் இணை,
பருச் சுடர் பாய்ந்து உறப் பணிந்து தோன்றினார்.
     பெருஞ் சுடரோன் எனப்படும் கதிரவன் ஒளி கெடத் தக்க நிறம்
வாய்ந்த ஒளி மேனியைக் கொண்ட பதினாயிரம் வானவர், திரண்ட ஒளி
பாய்ந்து நிலைக்குமாறு, திருச்சுடரோன் எனப்படும் அச்சிறுவனின் இரண்டு
அடிகளையும் வணங்கியவண்ணம் வந்து தோன்றினர்.

     'இருஞ்சுடர்' என்பது,எதுகை ஓசைப் பொருட்டு, 'இருச்சுடர்' என
நின்றது.




               19
எல்லியல் படச்சுட ரிரவி றோற்றினார்
பல்லியங் கடலொலி படமு ழக்கினா
ரல்லியங் குழவியை யளவில் வாழ்த்தினார்
கல்லியம் பாத்தொடை கனியப் பாடினார்.

எல் இயல் படச் சுடர் இரவில் தோற்றினார்;
பல் இயம் கடல் ஒலி பட முழக்கினார்;
அல்லி அம் குழவியை அளவு இல் வாழ்த்தினார்;
கல்லியம் பாத் தொடை கனியப் பாடினார்.


     அவ்வானவர் பகலின் தன்மை கெடுமாறு ஒளிரும் இரவு போல்
அதனைத் தோன்றச் செய்தனர்; கடலின் ஒலியும் கெடுமாறு பல இசைக்
கருவிகளை முழக்கினர்; ஆம்பல் மலர் போல் அழகிய அக்குழந்தையை
அளவில்லாது வாழ்த்தினர்; தேன் போன்ற பாடல்களைத் தொடைநயம்
கனியப் பாடினர்.

     தொடை - எதுகை; மோனை போன்ற பாடல் உறுப்புக்கள்.
                  நாதன் நீங்க நலமெலாம் நீங்கல்
     - விளம், - மா, - தேமா, - விளம், - மா, - தேமா
                 20
வார்வளர் முரசு மாரா வரிவளர் வளையு மூதா
தேர்வள ருருளுஞ் செல்லா தெருவள ரரவுந் தோன்றா
வூர்வள ரசைவு மில்லா வுறங்கிய சாமத் தேகிச்
சீர்வள ருயிர்போ யவ்வூர் செத்துடம் பொத்த தன்றே.
வார் வளர் முரசும் ஆரா, வரி வளர் வளையும் ஊதா,
தேர் வளர் உருளும் செல்லா, தெரு வளர் அரவும் தோன்றா,
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி,
சீர் வளர் உயிர் போய் அவ் ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே


     வாரால் அடித்துப் பிறக்கும் முரசு முழங்காமலும், வரிகளைத்
தன்பால் கொண்டுள்ள சங்கு ஊதாமலும், தேரோடுபொருந்திய சக்கரம் உருண்டு செல்லாமலும், தெருவிலே வளரும் ஆரவாரம் தோன்றாமலும், ஊரில் காணப்படும் நடமாட்டம் இல்லாமலும் உறங்கிக் கிடந்த நள்ளிரவில் இவர்கள் நீங்கிச் சென்றமையால், அவ்வூர் தன் சிறப்பு வளர்வதற்குக் காரணமான உயிர்போகச் செத்த உடம்பு போன்றது.
'அன்றே' - இங்கும், தொடரும் பாடல்களிலும் அசைநிலை : வரி - சங்கைச் சுற்றிக் காணப்படும் கோடு. அது 'புரி' எனப்படும். புரியின் போக்கு நோக்கி, வலம்புரி இடம்புரி எனச் சங்கு இருவகைப்படும். வலம்புரிச் சங்கே சிறப்புக் கொண்டது. 'செத்தவுடம்பு' என்பது, 'செத்துடம்பு' என வந்தது தொகுத்தல் விகாரம். அரவு - அரவம் என்பதன் கடைக்குறை.



          21
நல்வினை யுலந்த போழ்தின் னலமெலா மகலும் போலக்
கொல்வினை யறுப்ப வந்த குணத்தொகை யிறைவன் போக
வல்வினை மருளிற் பொங்கு மல்லவை யுயிரை வாட்டப்
புல்வினை மல்கிச் சீலம் புரிநலம் போயிற்றன்றோ.
நல்வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகலும் போல,
கொல் வினை அறுப்ப வந்த குணத் தொகை இறைவன் போக,
வல் வினை மருளின் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட,
புல் வினை மல்கி, சீலம் புரி நலம் போயிற்று அன்றே.


     நற்செயல் அழிந்த போதே நலமெல்லாம் நீங்குதல் போல, கொல்லும் தன்மை வாய்ந்த பாவ வினையை அறுக்க அவதரித்து வந்த, குணமெல்லாம் தொகையாகக் கொண்ட ஆண்டவன் நீங்கிப் போகவே, வலிமையின் வயப்பட்ட அறிவு மயக்கத்தால் பெருகும் பாவங்கள் உயிரை வாட்ட, அதனால் தீவினை பெருகி, நல்லொழுக்கத்தால் வரும் நன்மையெல்லாம் போயிற்று.
 அல்லவை - அறம் அல்லாதவை: மறங்கள் - பாவங்கள் நல்வினை
- புல்வினை.

 
                  22
இருள்புரி கங்கு னாப்ப ணிரிந்தறக் கடலோன் போக
வருள்புரி வுணர்வு காட்சி யறந்தவஞ் சுருதி தானந்
தெருள்பொறை நீதி வீரஞ் சீர்தகை யுறுதி ஞானம்
பொருள்புகழ் மற்றப் பொலிநலம் போயிற் றன்றே.
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அறக் கடலோன் போக,
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம்
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம்
பொருள் புகழ் புலமை மற்றப் பொலி நலம் போயிற்று அன்றே.
     
இருளைச் செய்யும் இரவின் நடுவே அறக் கடலாகிய ஆண்டவன்
நீங்கிச் செல்லவே, அருளும் அன்பும் உணர்வும் அறிவும் அறமும்
தவமும் வேதமும் கொடையும் உறுதியும் ஞானமும் பொருளும் புகழும்
புலமையும் மற்றுமாக ஒரு நாட்டைப் பொலியச் செய்யும் நலமெல்லாம்
போயிற்று. 

Donnerstag, 28. Juni 2018

8.தேம்பாவணி -3

எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான்
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான்
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர்;
பிதிர் இலாத் திரு உளம் பேணித் தேரினார்.


     தனக்கு எதிர் இல்லாதவனும் பகைஇல்லாதவனும் ஒப்புமை எதுவும்
இல்லாதவனும் கெடுதல் இல்லாத வல்லமை உள்ளவனும் உணர்வுக்கு
எட்டாமல் உயர்ந்து நின்றவனுமாகிய ஆண்டவனின் உதறக்கூடாத கட்டளை இது என்று அவ்விருவரும் அவனைத் தொழுது வேண்டினர்; சிதைதல் இல்லாத அவன் திருவுளத்தை விரும்பி ஏற்றுத் தெளிவு கொண்டனர்.



                          11
தேரிய மனத்தவர் தேறி நாயக
னாரிய முகத்துறை யங்க ணேகினார்
நீரிய முகிலெனப் படத்தை நீக்கலாற்
சூரிய னவியெனத் தோன்றல் தோன்றினான்.
தேரிய மனத்தவர் தேறி, நாயகன்
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார்;
நீரிய முகில் என் அப் படத்தை நீக்கலால்,
சூரியன் நவி எனத் தோன்றல் தோன்றினான்.


     தெளிந்த மனங் கொண்ட அவ்விருவரும் தேறி, ஆண்டவன்
அழகிய முகத்தோடு இருந்த அவ்விடம் சென்றனர்; நீரால் நிறைந்த
மேகம் என்னத்தக்க அப் போர்வையை விலக்கவும், ஆதவன் அழகு
போல் அம்மகன் தோன்றினான்.

     நவி - நவ்வி என்ற சொல்லின் இடைக்குறை.




                                12
முப்பொழு தொருபொழு தாக முற்றுணர்ந்
தெப்பொழு தனைத்துமெப் பொருளி யாவிலு
மெய்ப்பொரு டெளித்தவிர் காட்சி மேன்மையா
னப்பொழு துறங்கினா னன்னப் பார்ப்பனான்.        
முப் பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து
எப் பொழுது அனைத்தும் எப்பொருள் யாவினும்
மெய்ப்பொருள் தெளித்து அவிர் காட்சிமேன்மையான்,
அப்பொழுது உறங்கினான், அன்னப் பார்ப்பு அனான்


.
இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களும் ஒரு காலமே  போல முற்றிலும் உணர்ந்து, எக் காலமாயினும் அனைத்திலும் எப்பொருளா
யினும் யாவற்றிலும் உண்மைப் பொருளைத் தெளிவித்து விளங்கும் முற்றறிவினால் மேம்பட்டவனாகிய குழந்தைநாதன், அன்னக் குஞ்சு போன்றவனாய், அப்பொழுது உறங்கிக் கொண்டிருந்தான்.

     
பொருள் + யாவினும் - 'பொருளியாவினும்' என, யகரப் புணர்ச்சியில்
இடையே இகரம் பெற்றது.



              13
கலைமுகந் தருந்திய புலமைக் காட்சியோ
யலைமுகந் தருந்திய வருளென் றுன்பணி
கொலைமுகந் தருந்துயர் கொண்டுஞ்
செய்வலென்
றுலைமுகந் தருந்தழற் குருகி யேந்தினாள்.
"கலை முகந்து அருந்திய புலமைக் காட்சியோய்,
அலை முகந்து அருந்திய அருள் என்று, உன் பணி,
கொலை முகந்த அருந்துயர் கொண்டும்,
செய்வல்!" என்று,
உலை முகந்த அருந் தழற்கு உருகி, ஏந்தினாள்.


     மரியாள், உலையினின்று வாரிக் கொண்ட அரிய நெருப்புப் போன்ற அந்நிலைக்கு மனம் உருகி, "கலைகளையெல்லாம் வாரி உட்கொண்ட புலமைக்கு ஒப்பான அறிவு கொண்ட ஆண்டவனே, கொலையைத் தழுவ வேண்டிய அரிய துயரத்தை அடைய நேர்ந்தாலும், அதனை, கடலை வாரி உண்ட (கடலினும் பெரிதாய) உன் அருளென்று மதித்து, உன் கட்டளையைச் செய்வேன்!" என்று கூறி, அம்மகனை ஏந்தி எடுத்துக் கொண்டாள்.


            14
ஏர்வள ரடிபணிந் திளவ லேந்தலி
னீர்வளர் குவளைதேன் றுளித்த னேரவன்
சீர்வளர் விழிமலர் சிறந்து முத்துகச் சூர்வளர்
மனத்தவர் துகைத்து ளேங்கினார்.
ஏர் வளர் அடி பணிந்து இளவல் ஏந்தலின்,
நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர், அவன்
சீர் வளர் விழி மலர் திறந்து முத்து உக,
சூர் வளர் மனத்து அவர், துகைத்து உள் ஏங்கினார்.


 அழகு நிறைந்த அடிகளைப் பணிந்து குழந்தை நாதனை ஏந்தி
எடுக்கவும், நீரில் வளரும் குவளை மலர் தேனைத் துளித்தது போல்,
அவன் சிறப்பு நிறைந்த தன் கண்ணாகிய மலரைத் திறந்து முத்துப் போன்ற கண்ணீரைச் சொரியவே, துன்பம் பெருகிய மனத்தைக் கொண்ட அவ்விருவரும், மிதிக்கப்பட்ட தன்மையாய்த் தம் உள்ளத்துள் ஏங்கினர்.


             15

கதிர்தருங் காதலன் கன்னித் தாயுரத்
தெதிர்தரும் விழிகலந் தினிதிற் சாய்ந்தனன்
முதிர்தரு மமிர்துக முறுவற் கொட்டலாற்
பொதிர்தரு மின்பமுற் றிருவர் பொங்கினார்.

கதிர் தரும் காதலன் கன்னித் தாய் உரத்து
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன்,
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால்,
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார்.


       ஒளியை வீசும் மகன் தன் கன்னித் தாயின் மார்பில், எதிர்ப்
படும் இருவர் கண்களும் கலக்குமாறு நோக்கி இனிது சாய்ந்து கொண்டவனாய், முதிர்ந்த அமிழ்தத்தைப் பொழிந்த தன்மையாய்ப் புன்முறுவல் காட்டவே, அவ்விருவரும் நிறைவு தரும் இன்பம்
அடைந்து மனம் பூரித்தனர்.


              16
பொங்கிய வருத்தியாற் பொலிந்த கன்னியுந்
தங்கிய கொடியொடுட் டளிர்த்த சூசையும்
பங்கய மலரடி பணிந்து பாலனை
யங்கிவ ரகலுதற் காசி கேட்டனர்.
பொங்கிய அருத்தியால் பொலிந்த கன்னியும்,
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும்,
பங்கய மலர் அடி பணிந்து, பாலனை அங்கு
இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர்.


       பொங்கிய ஆசையோடு பொலிந்த கன்னித் தாயும்,
தன்னிடமுள்ள மலர்க் கொடியோடு உள்ளமும் தழைத்த சூசையும்,
குழந்தை நாதனின் தாமரை மலர் போன்ற அடிகளை வணங்கி,
அங்குப் போவதற்கு இவ்விருவரும் அப்பாலனையே ஆசி கேட்டனர்.  

Montag, 25. Juni 2018

8.தேம்பாவணி -2

அழல் குளித்த பைந் தாதோ? கண் பாய் வேலோ? அகல் வாய்ப் புண்
 புழல் குளித்த செந் தீயோ? உருமோ? கூற்றோ? பொருவு இன்றி 
நிழல் குளித்த உரு வானோன் கொடுஞ் சொல் கேட்டு, நெடுங் கடல் நீர்ச் சுழல் குளித்த மனம் சோர்ந்து, வளன், அப்பணியைத் தொழுது, உளைந்தான்.

அச் சொல்லைக்கேட்ட சூசையின் உள்ளம் நெருப்பில் மூழ்கிய பசுமையான பூந்தாதோ? அக்கொடுஞ்சொல் கண்ணில் பாய்ந்த வேல் தானோ? அகன்ற வாயை உடைய புண்ணின் துவாரத்துள் நுழைந்த செந்தீயோ? இடியோ? கூற்றுவனோ? ஒப்பற்ற விதமாய் ஒளியில் மூழ்கிய உருவத்தைக் கொண்ட அவ்வானவனின் கொடுஞ் சொல்லைக் கேட்டு, நெடிய கடல் நீரில் உண்டான சுழியில் அகப்பட்டு மூழ்கிய தன்மையாய் மனம் சோர்ந்து, அக்கட்டளையைச் சூசை தொழுது ஏற்றுக்கொண்டு, பின்னும் வருந்தினான். 

6
மலிநிழற்பட் டலர்மலரின் னொய்யஞ் சேயின் மழவினையும் 
 பொலிநிழற்பட் டலர்பூங்கொம் பொத்தா ணொய்வும் புரைவினையா லலிநிழற்பட் டெரியெசித்தார் நாட்டின் சேணு மாய்ந்தவளன் 
புலிநிழற்பட் டேங்கியமான் போல வேங்கிப் புலம்பினனால். 
 மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழவினையும், 
பொலி நிழல் பட்டு அலர் பூங் கொம்பு ஒத்தாள் நொய்வும், புரை வினையால் அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன், 
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கிப் புலம்பினன் ஆல்.

 நிறைந்த நிழலில் வளர்ந்து மலர்ந்த பூவினும் மென்மையான அழகிய மகனின் இளமையையும், பொலிந்த நிழலிடையே வளர்ந்து மலர்ந்த பூங்கொம்பு போன்ற மரியாளின் மென்மையையும், தம் பாவச் செயல்களால் நெருப்பின் நிழலில் அகப்பட்டதுபோல எரியும் எசித்து மக்கள் வாழும் நாட்டின் தொலைவையும் ஆராய்ந்து பார்த்த சூசை, புலியின் நிழல் தன்மேல் பட்டு ஏங்கிய மான்போல ஏங்கிப் புலம்பினான். 

 7
 அறிவின்மை யுறவின்மை யறத்தி னின்மை யங்கட்சென் 
 னெறியின்மை நெறிதொலைக்கு முறுதி யின்மை நெறிதன்னிற் 
 பறியின்மை சார்பின்மை தன்பா லின்மை பரிசல்லாற் 
பிறிவின்மை யோர்ந்துளைந்தா னுளைந்து மீண்டே பிரிவுற்றான். 
 அறிவு இன்மை, உறவு இன்மை, அறத்தின் இன்மை, அங்கண் செல் 
 நெறி இன்மை, நெறி தொலைக்கும் உறுதி இன்மை, நெறி தன்னில் 
 பறி இன்மை, சார்பு இன்மை, தன்பால் இன்மை பரிசு அல்லால் 
 பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான்; உளைந்து, மீண்டே பிரிவு உற்றான்

அங்கு அறிமுகமானவர் இல்லாமை, உறவினர் இல்லாமை, அறவுணர்வு கொண்டவர் இல்லாமை, அங்குச் செல்லும் வழித் தெரியாமை, வழியைக் கடந்து தொலைக்கும் துணை இல்லாமை, வழியில் பொன் இல்லாமை, பிற சார்பு எதுவும் இல்லாமை, தன்னிடம் வறுமைத்தன்மையே அல்லாமல் வேறொன்றும் இல்லாமை - இவற்றையெல்லாம் நினைந்து வருந்தினான்; இவ்வாறெல்லாம் சிறிது நேரம் வருந்தியும், பின் அங்கிருந்து பிரிந்து மரியாளிடம் சென்றான். 

 எசித்துப் பயணம் -

விளம், - விளம், - மா, கூவிளம் 

 8 
 வேரியந் தாரினான் விரைந்தெ ழுந்தனன் 
 மாரியந் தாரையின் வளர்கண் டாரைநீர் 
நேரியந் துணைவியை நேடி நாயகன் 
றேரியங் கேவிய பணியைச் செப்பினான். 
 வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன்;
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர் 
 நேரி, அம் துணைவியை நேடி, நாயகன் 
தேரி அங்கு ஏவிய பணியைச் செப்பினான். 

 மணமுள்ள அழகிய மலர்க் கொடியை மாலையாகக்கொண்ட சூசை விரைந்து எழுந்தான்; மழையின் அழகிய நீர்த் தாரை போல், தன் கண்ணில் பிறக்கும் கண்ணீர்த் தாரை சொரிந்து, அழகிய தன் துணைவியைத் தேடிக் கண்டு, ஆண்டவன் நல்ல தென்று தெளிந்து அங்கு வானவன் மூலம் ஏவிய கட்டளையை எடுத்துக் கூறினான். நேர்ந்து, தேர்ந்து என்ற சொற்கள், எதுகைப் பொருட்டு, நேரி, தேரி என நின்றன. 

 9 
செய்யிதட் டாமரை பழித்த சீறடித் 
துய்யிதட் டுப்பவிழ் சுருதி வாயினா 
ளையிதட் டாரினா னறையத் தீமுனர் 
 நொய்யிதட் டாதென நொந்து வாடினாள். 
 செய் இதழ்த் தாமரை பழித்த சீறு அடித் 
துய் இதழ்த் துப்பு அவிழ் சுருதி வாயினாள், 
 ஐ இதழ்த் தாரினான் அறைய, தீமுனர் 
 நொய் இதழ்த் தாது என நொந்து வாடினாள்.

 செந்நிற இதழ்களைக் கொண்ட தாமரை மலரைப் பழித்த சிறிய அடிகளும் தூய உதடுகள் பவளம் போல் விரியும் வேத வாயும் கொண்ட மரியாள், அழகிய இதழ்கள் உள்ள மலர்க் கொடியை மாலையாகக் கொண்ட சூசை இவ்வாறு கூறவும், மெல்லிய இதழ்களிடையே இருக்கும் பூந்தாது தீயின்முன் இடப் பட்டாற்போல நொந்து வாடினாள். 'இதழ்' என்ற சொல், 'இதள்' என நின்றாற் போலக் கொண்டு, வருமொழியில் தகரம் வர, ளகரமும் தகரமும் டகரங்களாக மாறும் விதியை ழகரத்திற்கும் பொருந்துவதாகக் கொண்டமைத்த இடம் இது. கந்த புராணத் தொடக்கத்துக் கச்சியப்ப முனிவர், 'திகழ் தசக்கரம்' என்பதனை, 'திகட சக்கரம்' எனப் பொருத்தியது இதற்கு மேற்கோளாக அமையும். சிறுமை + அடி - சீறடி. 

 10
 எதிரிலான் பகையிலா னிணையெ லாமிலா 
 னுதிரிலா மதுகையா லுணர்வின் மேனின்றான் 
 விதிரிலா விதியிதென் றிறைஞ்சி வேண்டினர் 
 பிதிரிலாத் திருவுளம் பேணித் தேரினார்.

Donnerstag, 21. Juni 2018

8.தேம்பாவணி -1

பைதிரம் நீங்கு படலம் (1-39பாடல்கள் ) 

 எரோதன் கொடுமைக்கு அஞ்சிச் சூசையும் 
மரியாளும் குழந்தைநாதனை எடுத்துக் கொண்டு 
சூதேய நாட்டைவிட்டு எசித்து நாட்டிற்குப் பயணம் 
மேற்கொண்டதைக் கூறும் பகுதி. பைதிரம் என்பது நாடு. 

 சூசைக்கு வானவன் கட்டளை -

 - காய், - - காய், - மா, - மா, - - காய் 

 1
 களிமுகத்தி னிவையாகிப் பைம்பூ மேய்ந்த கனலொப்பச் 
 சுளிமுகத்தி னுற்றதுய ருள்ளம் வாட்டித் துகைத்தன்னார் 
 வளிமுகத்தின் விளக்கன்ன மயங்கி யேங்க வந்தவையான்
 கிளிமுகத்தின் கிளவியொடு விரும்பி யிங்கண் கிளக்குகிற்பேன். 
 களி முகத்தின் இவை ஆகி, பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப, 
 சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டித் துகைத்து, அன்னார், 
 வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை, யான் 
 கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளக்கு கிற்பேன் :

 இவையெல்லாம் மகிழ்ச்சியோடு நடந்த பின், பசுமையான பூவை மேய முற்பட்ட நெருப்புப் போல, சினந்த தன்மையாக வந்தடைந்த துயரம் தம் உள்ளத்தை வாட்டி மிதிக்கக்கொண்டு, சூசையும் மரியாளுமாகிய அவர்கள், காற்றின் முன் இட்ட விளக்குப்போல மயங்கி ஏங்குமாறு நேர்ந்தவற்றை, கிளியினிடம் தோன்றும் இனிய சொல்லோடு நான் இங்கு விரும்பிச் சொல்ல முற்படுவேன்: இப்பகுதி பற்றிய செய்தி, பு. ஏ., மத்தேயு 2 ; 13 - 15 காண்க. 'மடக்கிளி கிளக்கும் புன்சொல்' பாயிரம் 6. 

 2
 பூந்தாமக் கொம்பனையாள் பூத்த பைம்பூ முகைமுகத்திற் 
 றேந்தாமத் திருமகனேர்ந் தின்னு மெண்ணாள் செலவன்னார் 
தாந்தாமக் கடிநகர்கண் டங்க லுள்ளி நாடொறும்பொற் காந்தாமக் கோயில்விழா வணியின் வெஃகிக் கனிசேர்வார். 

பூந் தாமக் கொம்பு அனையாள், பூத்த பைம் பூ முகை முகத்தின் 
தேன் தாமத் திரு மகன் நேர்ந்து, இன்னும் எண் நாள் செல, 
 அன்னார் தாம் தாமக் கடி நகர்க்கண் தங்கல் உள்ளி, நாள்தொறும், 
பொன் காந்து ஆம் அக் கோயில் விழா அணியின் வெஃகிக் கனி சேர்வார்.

 ஒளியுள்ள பூங்கொம்பு போன்ற மரியாள், பூக்கும் பருவத்துப் பசுமையான மலர் மொட்டுப் போன்ற முகங் கொண்டு தேன் நிறைந்த மாலை போன்ற திரு மகனைக் காணிக்கையாக நேர்ந்தபின், மேலும் எட்டு நாட்கள் அக்கோவிலுக்குச் செல்ல வசதியாக, அம்மூவரும் ஒளி பொருந்திய மதிற் காவலுள்ள அந்நகரில் தங்க நினைந்து, பொன்னொளி கொண்ட அக்கோவிலுக்கு நாள்தோறும் விழாக் கோலம் காண்பது போன்ற விருப்பத் தோடு இனிதே சென்று சேர்வர். தேன் + தாமம் - தேந்தாமம். ஒளியைக் குறிக்கும் 'காந்தம்' என்ற சொல், 'காந்து' எனக் கடைக்குறையாய் நின்றது. 

 3 
நெஞ்சுபதி கொண்டவரு ளெஞ்சா நீரார் நிறைந்தைந்நாண் 
மஞ்சுபதி கொண்டமலை யொத்த பைம்பூ மணிப்புகைசூழ் 
விஞ்சுபதி கொண்டமரர் வைகுங் கோயில் மேவியபின் 
னஞ்சுபதி கொண்டவுரைத் தூது வானோ னவின்றடைந்தான். 
 நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐந் நாள், 
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த, பைம் பூ மணிப் புகை சூழ் 
 விஞ்சு பதி கொண்டு அமரர் வைகும் கோயில், மேவிய பின், 
 நஞ்சு பதி கொண்ட உரைத் தூது வானோன் நவின்று அடைந்தான்.

 மேகங்கள் குடி கொண்ட மலை போன்று, பசுமையான மலர் போல் மெல்லிய அழகிய வாசனைப் புகைகள் சுற்றிலும் மண்டும் பதியாகக் கொண்டு வானவர் தங்கும் திருக் கோவிலுக்கு, தம் நெஞ்சில் குடி கொண்ட அருள் என்றும் நீங்காத இயல்புள்ள அம்மூவரும் நிறைவாக ஐந்து நாட்கள் சென்று வந்த பின், ஒரு வானவன் நஞ்சு குடிகொண்ட தூது மொழியைக்கூறியவாறு வந்து சேர்ந்தான் கோவிலை மலையாகவும் புகையை மேகமாகவும் கொள்க. 'உரைத் தூது' என்பதனைத் 'தூதுரை' என மாற்றுக.

 4
 கான்வயிறார் பூங்கொடியோ னுறங்குங் காலை கதிர்தும்மி 
மீன்வயிறா ருருக்காட்டி விண்ணோ னெய்தி விரைக்கொடியோ 
யூன்வயிறார் வேல்வேந்த னிளவற் கோற லுள்ளினனீ 
தேன்வயிறா ரிப்பதி நீத் தெசித்து நாட்டைச் செல்கவென்றான். 
 கான் வயிறு ஆர் பூங் கொடியோன் உறங்குங் காலை, கதிர் தும்மி, 
 மீன் வயிறு ஆர் உருக் காட்டி விண்ணோன் எய்தி, "விரைக்கொடியோய், 
 ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவற் கோறல் உள்ளினன்; நீ 
 தேன் வயிறு ஆர் இப் பதி நீத்து, எசித்து நாட்டைச் செல்க" என்றான்.

 தன்னுள் வாசனைநிறைந்த மலர்க்கொடியை உடையவனாகிய சூசை உறங்கிக் கொண்டிருந்த வேளையில், கதிரைப் பொழிந்து, விண்மீனிடத்து நிறைந்து காணும் ஒளி உருவம் காட்டி அவ் வானவன் வந்து நின்று, "வாசனை கொண்ட மலர்க்கொடியை உடையவனே, பகைவரின் ஊனைத் தன்னிடத்துக் கொண்ட வேலை உடைய மன்னன் சிறுவனைக் கொல்ல நினைந்துள்ளான்; எனவே, தன்னிடத்துத் தேன் நிறைந்துள்ள இந்நகரை விட்டு நீங்கி, எசித்து நாட்டிற்குச் செல்வாயாக" என்றான். 'நாட்டிற்குச் செல்க' என்பது, 'நாட்டைச் செல்க' என்று வந்தது உருபு மயக்கம். வேந்தன் - எரோதன், அவன் குழந்தை நாதனைக் கொல்ல நினைந்தது, 25-வது, குழவிகள் வதைப் படலம் காண்க. 5 அழற்குளித்த பைந்தாதோ கண்பாய் வேலோ வகல்வாயுட் புழற்குளித்த செந்தீயோ வுருமோ கூற்றோ பொருவின்றி நிழற்குளித்த வுருவானோன் கொடுஞ்சொற் கேட்டு நெடுங்கடனீர்ச் சுழற்குளித்த மனஞ்சோர்ந்து வளனப் பணியைத் தொழுதுளைந்தான்.

Samstag, 16. Juni 2018

7.கம்பராமாயணம் -7

ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல் 

1551.ஆடகம் தரு பூண் முயங்கிட
     அஞ்சி அஞ்சி, அனந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட,
     யாம பேரி இசைத்தலால்,
சேடகம் புனை கோதை மங்கையர்
     சிந்தையில் செறி திண்மையால்,
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர்,
     நையும் மைந்தர்கள் உய்யவே.

     சேடகம் புனை கோதை மங்கையர் - சிறப்புப் பொருந்திய
மலர்மாலையை அணிந்த மகளிர்; சிந்தையில் செறி திண்மையால் 

மனத்தில் பொருந்திய வலிமையோடு; ஊடல் கண்டவர் - தத்தம் கணவன்
மாரோடு புலந்தவர்கள்; ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி -
(கணவன்மார்) தம் மார்பில் அணிந்தபொன்மாலையோடு தழுவுவதற்கு
(மகளிர் மார்பில் ) உறுத்துமே என்று மிகவும் அச்சம் கொண்டு;
அனந்தரால் - மனத்தடுமாற்றத்தோடு;  ஏடு அகம் பொதி தார்
புனைந்திட -
  பூக்களால்கட்டிய மாலையை அணிந்துகொள்ள;  யாம
பேரி இசைத்தலால் -
அப்பொழுது  கடையாமம் கழிந்ததைஅறிவிக்கும்
முரசம் ஒலித்தலால்;  நையும் மைந்தர்கள் உய்ய - மனைவியரின்
ஊடலால்வருந்தும் கணவன்மார் அத்துன்பத்தினின்றும் தப்பும்படி;  கூடல்
கண்டிலர் -
கூடி  மகிழ்தலைப்பெற்றாரில்லை.
     மகளிரின் ஊடலைக் கணவன்மார் போக்குவதற்கு முன்னே யாமம்
கழிந்ததால் அம்மகளிர் கூடல்பெறாமல் பிரிந்தனர்.  ஊடல் - கணவனும்
மனைவியும் ஓர் அமளியில் இருக்கும்போது,  கணவனிடத்துப்புலத்தற்கும்
காரணம் இல்லாமல் இருந்தும்,  மிகுந்த காதலால் ஒரு காரணத்தைக்
கற்பித்துக்கொண்டுமனைவி மனம் மாறுபட்டு நிற்றல்.  மைந்தர் உய்யக்
கூட்டம் நிகழாமையால் மகளிரும் வாடினர் என்பது விளங்கும்.         61



பல்வகை ஒலிகள்
  
1552.தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன;
     தார் ஒலித்தன; பேரி ஆம்
முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன;
     முத்து ஒலித்து எழும் அல்குலார்
இழை ஒலித்தன; புள் ஒலித்தன;
     யாழ் ஒலித்தன; - எங்கணும் -
மழை ஒலித்தனபோல் கலித்த,
     மனத்தின் முந்துறு வாசியே.
     எங்கணும் - நகரின் எல்லா இடங்களிலும்;  தழை ஒலித்தன -
பீலிக்குஞ்சங்கள்விளங்கின;  வண்டு ஒலித்தன - வண்டுகள் ஆரவாரம்
செய்தன; தார் ஒலித்தன -மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு
ஒலித்தன -
மலர்மாலைகள் விளங்கின; பேரிஆம் முழவு ஒலித்தின -
பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன;  தேர் ஒலித்தன -தேர்கள்
தெருவில் ஓடும்போது  ஒலி எழுப்பின;  முத்து  ஒலித்து  எழும்
அல்குலார் -
முத்துவடங்கள்உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய
பெண்களுடைய;  இழை ஒலித்தன - அணிகலன்கள் ஒலித்தன; புள்
ஒலித்தன -
பறவைகள் கூவின;  யாழ் ஒலித்தன - வீணைகள் இசைத்தன;
மனத்தின் முந்துறு வாசி - மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து
ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் - மேகங்கள் முழங்கினாற்போல;
கலித்தன - ஒலித்தன.
ஒலித்தன என்னும்  சொல் பல்வேறு பொருள்களில் அடுத்தடுத்து
வந்தமையால் சொற்பின்வருநிலை அணி.                          62



விளக்குகள் ஒளி மழுங்குதல்
  
1553.வையம் ஏழும் ஓர் ஏழும் ஆர் உயிரோடு
     கூட வழங்கும் அம்
மெய்யன், வீரருள்வீரன், மா மகன்மேல்
     விளைந்தது ஒர்காதலால்
நைய நைய, நல் ஐம்புலன்கள்
     அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி
     போல் மழுங்கின - தீபமே.
     வையம் ஏழும் ஓர் ஏழும் - பதினான்கு உலகங்களையும்;  ஆர்
உயிரோடு கூட வழங்கும்அம் மெய்யன் -
தன் அரிய உயிருடனே
சேர்த்துக் கொடுக்கின்ற அந்த மெய்ம்மையாளனும்; வீரருள் வீரன் -
வீரர்களுக்குள் வீரனாய் இருப்பவனுமாகிய தயரதன்;  மா மகன்மேல்
விளைந்தது ஓர் காதலாதல்-
தன் மூத்த பிள்ளையிடத்து எழுந்த ஒப்பற்ற
பாசத்தால்; நையநைய - மிகவும் வருந்த;  நல் ஐம்புலன்கள் அவிந்து
அடங்கி -
சிறந்த ஐந்து புலன்களும்கெட்டு அடங்கிப்போக; நடுங்குவான்
தெய்வமேனி படைத்த -
நடுங்குகி்ன்றவனாகிய தயரதனதுதெய்வத்தன்மை
பொருந்திய உடலில் இருந்த;  சேய் ஒளிபோல் - செவ்விய ஒளி மெல்ல
மெல்லமழுங்குவது போல; தீபம் மழுங்கின - விளக்குகள் (பொழுது
விடிவதால்) ஒளி குறைந்தன.
     தயரதன் மேனி ஒளியிழந்தது போலத் தீபங்களும் ஒளியிழந்தன.  மா
மகன் - மூத்த மகன்,ஈண்டுப் பிறப்பானும் சிறப்பானும் முதல்வனாகிய
இராமனைக் குறித்தது. திருவுடை மன்னன் திருமாலாகக்கொள்ளப்படுதலின்,
அவன் மேனி  ‘தெய்வமேனி’ எனச் சிறப்பிக்கப்பட்டது. உயிர்ப்பிரியும்
காலம் அடுத்தபோது,  புலன்கள் கலங்கி ஒடுங்குதலும்,  உடம்பின் ஒளி
குன்றுதலும் நிகழ்வனவாகும்.                                   63




பல்வகை இசையொலி
  
1554.வங்கியல் பல தேன் விளம்பின.;
     வாணி முந்தின பாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின;
     பம்பை பம்பின; பல் வகைப்
பொங்கு இயம் பலவும் கறங்கின;
     நூபுரங்கள் புலம்ப, வெண்
சங்கு இயம்பின; கொம்பு அலம்பின,
     சாம கீதம் நிரந்தவே.
     வங்கியம் பல - இசைக் குழல்கள் பலவும்; தேன் விளம்பின -
தேன்போலும்  இனிய இசையை ஒலித்தன;  வாணி முந்தின பாணியின்
பங்கி -
சொற்கள் முற்பட்ட இசைப்பாட்டின் வகைகள்; அம்பரம் எங்கும்
விம்மின -
வானம் எங்கும் நிறைந்தன; பம்பை பம்பின - பம்பை என்னும்
வாத்தியங்கள் பேரொலி  செய்தன;  பல்வகை -பலவகையான; பொங்கு
இயல் பலவும் -
மகளிரின் காற்சிலம்புகள் ஒலிக்க; வெண்சங்குஇயம்பின-
வெள்ளிய வளையல்கள் அவற்றிற்கேற்ப ஒலித்தன;  கொம்பு அலம்பின -
ஊது கொம்புகள் ஒலித்தன;  சாமகீதம் நிரந்த - சாமவேத இசை நிரம்பின.
     அயோத்தி நகரில் காலையில் எழுந்த பல்வேறு ஒலிகள்
குறிக்கப்பட்டன.  கொட்டுவன, தட்டுவன, ஊதுவன முதலிய வாத்தியங்கள்
பலவகை.  நூபுரங்கள் புலம்ப என்பதற்கு மகளிர் காற்சிலம்பு என்றுபொருள்
கொண்டதற்கு  ஏற்பச் ‘சங்கு இயம்பின’ என்பதற்கு வளையல்கள் ஒலித்தன
என்றுபொருள்கொள்ளப்பட்டது. சங்கு - சங்கினால் ஆகிய வளையல். ஏ -
ஈற்றசை.                                                     64



கதிரவன் தோற்றம் 

1555.தூபம் முற்றிய கார் இருட் பகை
     துள்ளி ஒடிட, உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்றென
     சேயது ஆர் உயிர் தேய, வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகைத்
     திறத்தினில், வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
     ஒத்தனன், குண குன்றிலே.
     தூபம் முற்றிய - புகைபோல எங்கும் சூழ்ந்த; கார் இருள் பகை
துள்ளி ஓடிட-
கரிய இருளாகிய பகை குதித்து ஓடிப்போகவும்; உள் எழும்
தீபம் முற்றவும்-
வீடுகளின்உள்ளே எரிகின்ற விளக்குகள் எல்லாம்; நீத்து
அகன்றென -
ஒளியைத் துறந்து மழுங்கியபோல; சேயது ஆர் உயிர்
தேய
- தன் குலத்தில் பிறந்த தயரதனது அரிய உயிர் மெலியும்படி;  வெம்
பாபம் முற்றிய பேதை செய்த -
தீவினை முதிர்ந்த கைகேயி புரிந்த;
பகைத் திறத்தினில்- பகைச் செயலால்; வெய்யவன் - சூரியன்;  குண
குன்றின் -
கிழக்கு மலையில்; கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
ஒத்தனன்
- சினம் முதிர்ந்து  மிகவும் செந்நிறம்கொண்டவன் போலக்
காணப்பட்டான்.
     சூரியன் கிழக்கு மலையில் சிவந்து  தோன்றியதனைத் தன் குலத்தில்
பிறந்த தயரதனது உயிர்ஒடுங்குமாறு கேடு சூழ்ந்த கைகேயியின்மீது கோபம்
கொண்டவன் போலத் தோன்றினான் என்றது  ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.
குண குன்று - கதிரவன் எழும் கிழக்கு மலை. குணக்கு - கிழக்கு      65



தாமரைகள் மலர்தல்
  
1556.மூவர் ஆய், முதல் ஆகி, மூலம்
     அது ஆகி, ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில்
     ஒடித்த சேவகன், சேண் நிலம்
காவல் மா மூடி சூடு பேர் எழில்
     காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன முன்னம்
     மலர்ந்த - பங்கய ராசியே.
     மூவர் ஆய் - அயன்,  அரி,  அரன் என்னும் மூன்று மூர்த்திகளாகி;
முதல் ஆகி- அம்மூவர்க்குள்ளும் திருமாலாகிய முதல்வனாகி;  மூலம்
அது ஆகி -
இவையெல்லாவற்றிற்கும்அடியாய் ஆகி;  ஞாலமும் ஆகி -
உலகத்துள்ள எல்லாப் பொருள்களும் தானே ஆகி;  அத்தேவதேவர்
பிடித்த போர் வில் -
அந்த மகாதேவராகிய சிவபெருமான் பிடித்த
போரிற்குரியவில்லை; ஒடித்த சேவகன் - (சீதையை மணத்தற்காக) ஒடித்த
வீரன் ஆகிய இராமபிரான்; சேண் நிலம் காவல் - பெரிய மண் முழுதும்
காத்தற்குரிய;  மாமுடிசூடுபேர் எழில் -சிறந்த மகுடத்தைச்
சூட்டிக்கொள்ளும் பேரழகை; காணலாம் எனும் ஆசை கூர்- பார்க்கலாம்
என்னும் ஆவல் மிகுந்த;  பாவைமார் முகம் என்ன -  பெண்களின்
முகங்கள்போல;  பங்கயராசி முன்னம் மலர்ந்த - தாமரைப் பூக்களின்
கூட்டம்  முந்தி மலர்ந்தன.
     தாமரைப் பெண்களின் முகத்திற்கு உவமையாகச் சொல்வதே வழக்கம்.
இங்குப் பெண்களின் முகம்போலத்தாமரை மலர்ந்தன என்றார். இது எதிர்
நிலை உவமை அணி.


    “முதலாவார் மூவரே;  அம்மூவர்  உள்ளும்
     முதலாவான் மூரிநீர் வண்ணன்”


என்பது பொய்கையாரின் முதல் திருவந்தாதி.   
                    66

Montag, 11. Juni 2018

7.கம்பராமாயணம் -6

1541.எண் தரும் கடை சென்ற
     யாமம் இயம்புகின்றன - ஏழையால்,
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
     மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன
     காமர் துணைக் கரம்
கொண்டு, தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப
     போன்றன - கோழியே.
     எண்தரும் கடை சென்ற யாமம் -  எண்ணப்படுகிற யாமங்களில்
கடைசியாய் வந்த யாமத்தில்; இயம்புகின்றன கோழி - கூவுகின்றன வாகிய
கோழிகள்;  ஏழையால் - அறிவற்றவளானகைகேயியால்;வண்டு தங்கிய தொங்கல் மார்பன்-வண்டுகள் மொய்க்கின்ற மாலையை
அணிந்த மார்பினையுடைய தயரதன்;  மயங்கி - அறிவு அழிந்து;
விம்மியவாறு எலாம் கண்டு - புலம்பியவற்றை எல்லாம் பார்த்து; நெஞ்சு
கலங்கி -
மனம் கலங்கி;  அம் சிறை ஆன - அழகிய சிறகுகளாகிய;
காமர் துணைக் கரம்கொண்டு- அழகிய இரு கைகளால்;  தம் வயிறு
எற்றி எற்றி -
தம் வயிற்றில் பலமுறை அடித்துக்கொண்டு; விளிப்ப
போன்றன -
அழுவன போன்றிருந்தன.
     இது முதல் பதினாறு பாடல்களில் வைகறைப் பொழுதில் நிகழும்
நிகழ்ச்சிகள் புனைந்துரைக்கப்படுகின்றன. வைகறையில் இயல்பாகக் கூவும்
கோழிகள் கைகேயியால் துன்புற்ற தயரதனைப் பார்த்து அடித்துக்கொண்டு
அழுவன போன்றிருந்தன என்பது தற்குறிப்பேற்ற அணி.  இந்த அணிக்கு,
‘சிறை ஆன காமர் துணைக்கரம் என வரும் உருவக அணி அங்கமாய்
அமைந்தது.  கோழி - பால்பகா அஃறிணைப் பெயர். ஏ - ஈற்றசை.



ஒப்பு:தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரியருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம் (நளவெண்பா 280)       51

1542.தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி,
     மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதல் சிலம்பின்
     நின்று சிலம்புவ -
கேகயத்து அரசன் பயந்த விடத்தை,
     இன்னது ஓர் கேடு சூழ்
மா கயத்தியை, உள் கொதித்து,
     மனத்து வைவன போன்றவே.
     தோய் கயத்தும் - நீராடும் குளங்களிலிருந்தும்; மரத்தும் -
மரங்களிலிருந்தும்; மென் சிறை துள்ளி - மெல்லிய சிறகுகளால்
குதித்துக்கொண்டு; மீது எழு புள் எலாம் -வானத்தில் பறக்கின்ற
பறவைகள் எல்லாம்; தேய்கை ஒத்த மருங்குல் - தேய்வு பொருந்திய
சிற்றிடையையுடைய;  மாதல் சிலம்பின் நின்று - பெண்களின் பாதச்
சிலம்புகள்போலிருந்து;  சிலம்புவ - ஒவிப்பவை; கேகயத்து அரசன்
பயந்த விடத்தை -
கேகேய மன்னன் பெற்றெடுத்த விடம்போன்றவளை;
இன்னது ஓர்கேடு  சூழ் - இத்தகைய கெடுதியைச்சூழ்ந்து செய்த;  மா
கயத்தியை -
மிக்க கீழ்மையுடையவளை; உட்கொதித்து  - உள்ளம்
புழுங்கி; மனத்து வைவன போன்ற - மனத்திற்குள் ஏசுவனவற்றை
ஒத்திருந்தன;  ஏ -அசை.
     பறவைகள் விடியற் காலத்தில் ஒலிப்பதைக் கைகேயி செயல்கண்டு
அவளைத்
தம் மனத்தினுள் வைவது  போலும் என்றார். இது தற்குறிப்பற்ற அணி,
கணவன் உயிரை வாங்கக் காரணமாதலின்‘விடத்தை’ என்றார்.  கயத்தி -
கயவன் என்பதன் பெண்பால்; கீழ்மையுடையவள். அவள் செயலின்
கொடுமை நோக்கி ‘மா கயத்தி’ என்றார். ஏ - அசை                 52



யானைகள் துயில் ஒழிந்து எழுதல்  

1543.சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த
     இன் துயில் செய்தபின்,
‘வாம மேகலை மங்கையொடு வனத்துள்,
     யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும்’ என்று
     நடுங்குகின்ற மனத்தவாய்,
‘யாமும் இம் மண் இறத்தும்’
     என்பனபோல் எழுந்தன - யானையே.
     யானை - யானைகள்;  சேமம் என்பன பற்றி - தமக்குப்
பாதுகாப்பான கூடங்களில்பொருந்தி;  அன்பு திருந்த இன்துயில்
செய்தபின் -
இராமபிரானிடத்து அன்பு மிக இனிதுதூக்கத்தைச் செய்த
பின்பு;  வாம மேகலை மங்கையொடு - அழகிய மேகலை அணிந்த சீதை
யோடு;  யாரும் மறக்கிலா நாம நம்பி - எவரும் மறக்க முடியாத
திருப்பெயரை உடைய இராமபிரான்; வனத்துள் நடக்கும் என்று -
காட்டிற்குச் செல்வான் என்று;  நடுங்குகின்ற மனத்தவாய்- வருந்துகின்ற
நெஞ்சையுடையவனவாய்;  ‘யாமும் இம் மண் இறத்தும் - நாமும் இந்த
நாட்டைவிட்டுச் செல்வோம்;’  என்பன போல் - என்று கூறுவன போல;
எழுந்தன -கிளம்பின.
     யானைகள் எழுந்ததை, இராமபிரான் நாட்டை விட்டுக் காட்டுக்குச்
செல்லப் போவதனால் நாமும்இந்நாட்டைவிட்டுச் செல்வோம் என எழுந்தது
போலத் தோன்றியது என்கிறார். இது தற்குறிப்பேற்றஅணி. சேமம் - கூட்டு
மிடம்;  கூடம். வாமம் - அழகு. மேகலை - எண்கோவை மணி.  யானை -
பால்பகாஅஃறினைப் பெயர்.                                    53


விண்மீன்கள் மறைதல்  

1544.
சிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை,
     திருமாலை, அக்
கரிக் கரம் பொரு கைத்தலத்து, உயர் காப்பு
     நாண் அணிதற்குமுன்
வரித்த தண் கதிர் முத்தது ஆகி,
     இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்

விரித்த பந்தர் பிரித்தது ஆம் என,
     மீன் ஒளித்தது - வானமே.
     சிரித்த பங்கயம் ஒத்த - மலர்ந்த தாமரைப் பூக்களைப் போன்ற;
செங்கண்திருமாலை இராமனை - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய
இராமபிரானது;  கரிக் கரம்பொரு அக் கைத்தலத்து - யானையினது
துதிக்கையை நிகர்ந்த அந்தக் கையில்;  உயர்காப்பு நாண் -  சிறந்த
மங்கல நாணை;  அணிதற்கு முன் - பூண்பதற்கு முன்னமே;  இம் மண்
அனைத்தும் நிழற்ற -
இவ்வுலகம் முழுவதும் நிழல் செய்யும் வண்ணம்;
வரித்ததண் கதிர் முத்தது ஆகி- கட்டின குளிர்ந்த கிரணங்களையுடைய
முத்து வரிசைகளையுடையதாய்; மேல் விரித்த - வானத்தில் பரப்பி
வேயப்பட்டிருந்த; பந்தர் - பந்தல்; பிரித்தது ஆம் என- பிரிக்கப்பட்டது
போல; வானம் - ஆகாயம்; மீன் ஒளித்தது- விண்மீன்களோடு மறைந்தது.
     வானத்தையே பந்தலாகவும், விண்மீன்களை முத்துச்சரங்களாகவும்
கொண்டு, காலையில் விண்மீன்கள்மறைவதைப் பந்தலைப் பிரிக்கையில்
முத்துச்சரங்கள் அகற்றப்பெற்றன போன்றிருந்தது என்றார்.இது
தற்குறிப்பேற்றம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன்,  அதற்குரிய தலைவன்
வலங்கையில்காப்புக் கயிறு  (இரட்சா பந்தனம்) கட்டுதல் மரபு. சிரித்த
பங்கயம் - இல்பொருள் உவமை. இராமனை - இராமனுக்கு;  வேற்றுமை
மயக்கம்.                                                     54


மகளிர் எழுதல்
  
1545.‘நாம விற் கை இராமனைத் தொழும் நாள்
     அடைந்த நமக்கு எலாம்,
காம விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது’
     என்பது கற்பியா,
தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி,
     சாரல் மாரி தழங்கலால்,
மா மயில் குலம் என்ன, முன்னம்
     மலர்ந்து எழுந்தனர், மாதரே,
     நாம வில் கை இராமனை - பகைவர்க்கு அச்சத்தைத் தரும்
கோதண்டம் ஏந்திய கையையுடையஇராமனை;  தொழும் நாள் அடைந்த
நமக்கு எலாம் -
வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம்அனைவர்க்கும்;
காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனது கரும்பு வில்லுக்குத்
தோற்றுத்துன்புறுதற்கு இடமான இராப்பொழுது;  கரித்தது - நீங்கியது;
என்பது கற்பியா -என்பதைத் தெரிவித்துக் கொண்டு; பேரி ஒலித்தன -
முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி- அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால்-
மலைப் பக்கங்களில் தங்கியமேகம்போல முழங்கியதால்; மாமயில் குலம் என்ன - பெரிய மயில்களின்
கூட்டம் எழுந்தாற்போல; மாதர் - மகளிர்;  முன்னம் மலர்ந்து
எழுந்தனர்
- தம் கணவர் எழுவதற்குமுன்னே முகம் மலர்ந்து
துயிலினின்றும் எழுந்தனர்;
     நாமம் - அச்சம். கங்குல் மாலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
ஏ - ஈற்றசை.                                                 55


1546.இன மலர்க் குலம்வாய் விரித்து,
     இள வாச மாருதம் வீச, முன்
புனை துகிற்கலை சோர, நெஞ்சு
     புழுங்கினார் சில பூவைமார்;
மனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப்
     புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார்
     சில கன்னிமார்.
     சில பூவைமார் - பெண்கள் சிலர்;  இன மலர் குலம் வாய்
விரித்து-
பல்வகையானபூக்களின் கூட்டங்கள் வாய்விட்டு மலர; வாச இள
மாருதம் வீச -
நறுமணம் கலந்த இளங்காற்றுவீசுதலினால்; முன் புனை-
முன்னே தாம் அரையில் உடுத்தியிருந்த; துகில் கலைசோர - அடையும்
மேகலையும் குலைய;  நெஞ்சு புழுங்கினார் - மனம் வருந்தினார்கள்; சில
கன்னிமார் -
மணமாகா மகளிர் சிலர்; மனம் அணுக்கம் விட - நெஞ்சில்
உள்ள வருத்தம்  தீர;  தனித்தனி - தனித்தனியே (ஒவ்வொருவரும்);
வள்ளலைப்புணர்- இராமபிரானைச் சேர்வதாகக் கண்ட; கள்ளம் வன்
கனவுக்கு -
மிக்க வஞ்சனையையுடையகனாவிற்கு;  இடையூறு அடுக்க -
காற்றினால் தடை பொருந்துதலினால்;  மயங்கினார் -திகைத்தனர்.
     தென்றல் வீசுவதனால் காம விருப்பம் மிகக் கணவனைப் பிரிந்த
மாதர்கள் புழுங்கினர். திருமணமாகாதபெண் காற்றினால் தூக்கம் கலைந்து
கனவு நீங்க,  உண்மையறிந்து  மயங்கினர். விரித்து -விரிய;  செய்தென்
எச்சம் செயவென் எச்சமாயிற்று; எச்சத்திரிபு.                       56



குமுதங்கள் குவிதல் 

1547.சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு
     தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடுங் பழிகொண்டு,
     அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்கண்டு,
     சீரிய நங்கையார்.

வாய் அடங்கின என்ன வந்து குவிந்த -
     வண் குமுதங்களே.
     சாய் அடங்க - தன் பெருமை அழியவும்;  நலம் கலந்து  தயங்கு
தன்குல நன்மையும்-
நன்மை பொருந்தி விளங்குகின்ற  தனது  குலத்தின்
சிறப்பும்;  போய் அடங்க -  கெட்டழியவும்; நெடுங் கொடும் பழி
கொண்டு
- நெடுங்காலம் நிற்பதாகிய கொடிய பழியையேற்றும்; அரும்
புகழ் சிந்தும்
- பெறுதற்கரிய புகழைச் சிதறுகின்ற;  அத் தீ அடங்கிய
சிந்தையாள்-
அந்தக் கொடுமை பொருந்திய மனத்தையுடைய
கைகேயியினது;  செயல் கண்டு - தகாத செயலைப்பார்த்து;  சீரிய
நங்கைமார் வாய் -
சிறந்த பெண்களின் வாய்கள்;  அடங்கின என்ன-
அடங்கி மூடினாற்போல; வண்  குமுதங்கள் - வளப்பத்தையுடைய
செவ்வாம் பல் மலர்கள்;வந்து  குவிந்த - (இதழ்கள் கூடி) மூடின.
     ஆம்பல் மலர் காலையில் குவிதல் இயற்கை நிகழ்ச்சி. அது
கைகேயியின் கொடுமை கண்டு குலப்பெண்டிர்வாயடங்கியிருந்தாற்போன்று
இருந்தது என்பது தற்குறிப் பேற்றம். பழி கொண்டு புகழ் சிந்தினாள்என்பது
மாற்றுநிலை அணி (பரிவர்த்தனாலங்காரம்). தீ - உலமவாகு பெயர்;
தீப்போலும் கொடுமையைக்குறித்தது.   


                          57
1548. மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு
     தீயின் முழங்க, மேல்
வை அராவிய மாரன் வாளியும், வான்
     நிலா நெடு வாடையும்,
மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு
     மாதர்தம் மென் செவி,
பை அரா நுழைகின்ற போன்றன -
     பண் கனிந்து எழு பாடலே.
     மொய் அராகம் நிரம்ப - அடர்ந்த காம வேட்கை மனத்தில்
நிறையும்படியும்;  ஆசை முருங்கு தீயின் முழங்க - ஆசை கிளர்ந்த
எரியும் நெருப்பைப் போல மிகுந்திடுமாறும்; மேல் - வெளியே;  வை
அராவிய மாரன் வாளியும்-
கூர்மை செய்யப்பட்ட மன்மதன்அம்புகளும்;
வான் நிலா நெடு வாடையும்- விண்ணில் நிலவும் நீண்ட வாடைக்காற்றும்;
மெய் அராவிட -  உடலை அறுத்தலால்;  ஆவி சோர - உயிர் தளர;
வெதும்பும்மாதர்தம் மென்செவி - வாடுகின்ற மகளிருடைய மெல்லிய
காதுகளில்;  பண் கனிந்து  எழுபாடல் - இசை முதிர்ந்து  எழுகின்ற
பாடல்கள்; பை அரா நுழைகின்ற போன்றன - படத்தையுடைய பாம்புகள்
நுழைவனவற்றை ஒத்தன;
     கணவனைப் பிரிந்த மாதரை மாரன் அம்புகளும், வாடைக் காற்றும்
இரவில் வருத்த. காலையில்எழுந்த பாடல்கள் அவ் வருத்தத்தை
மிகுவித்துத்
துன்புறுத்தின. அராகம் - காதல்; பொருளிடத்துத் தோன்றும்
பற்றுள்ளம். ஆசை - உள்ளம்விரும்பியதைப் பெறவேண்டும் என்று மேலும்
மேலும் நிகழ்வது.  நிலா நெடுவாடை - நிலாவும் நெடியவாடைக் காற்றும்.
பாடல் - பள்ளியெழுச்சிப் பாடல்.  ஏ - ஈற்றசை.                   58

ஆடவர் பள்ளியெழுச்சி  
1549.‘ஆழியான் முடி சூடும் நாள்,
     இடை ஆன பாவிஇது ஓர் இரா
ஊழி ஆயினவாறு’ எனா, உயர்த
     போதின்மேல் உறை பேதையும்,
ஏழு லோகமும், எண் தவம் செய்த
     கண்ணும், எங்கள் மனங்களும்,
வாழும் நாள் இது’ எனா எழுந்தனர் -
     மஞ்ச தோய் புய மஞ்சரே.
     மஞ்சு தோய் புய மஞ்சர் - மேகத்தை யொத்த கைகளையுடைய
ஆடவர்;  ஆழியான்முடிசூடும் நாள் - சக்கரப்படை ஏந்திய இராம
பிரான் மகுடம் சூடிக்கொள்ளும் நாளுக்கு;  இடை ஆன - நடுவிலே வந்த;
பாவி இது  ஓர் இரா - பாவியாகிய இந்த ஓர் இரவு;  ஊழி ஆயினவாறு
எனா -
ஊழிக்காலம் போல நெடிதாய் இருந்தது  என்னோ என்று
எண்ணியும்;  உயர் போதின்மேல் உறை பேதையும் - சிறந்த
தாமரைமலரில் தங்கியுள்ள திருமகளும்; ஏழுலோகமும் - ஏழு உலகத்தில்
வாழ்வோரும்;  எண் தவம் செய்த கண்ணும் - முடி சூட்டுவிழாவைக்
காணப் பெருமைக்குரிய தவத்தைப் புரிந்த எங்கள் கண்களும்; எங்கள்
மனங்களும் -
அத்தகைய எங்கள் நெஞ்சங்களும்;  வாழும் நாள் இது
எனா -
வார்ச்சியுறும் காலம் இந்நாள்என்று எண்ணியும்;  எழுந்தனர் -
படுக்கையிலிருந்து எழுந்தனர்.
     இராமன் முடிசூடும் விடியலுக்குக் காத்திருந்தமையால்,  இரவு  நீண்டு
செல்வதாகத் தோன்றியது.எனவே, ‘பாவி இரா’ என்று பழித்தனர்.  எனினும்,
கைகேயி சூழ்ச்சி செய்த இரவாக அது அமைந்துஉண்மையிலேயே பாவி
இரவாக ஆயிற்று. எண் தவம் செய்த என்னும் அடையினை மனங்களோடும்
கூட்டுக.வாழும் நாள் - தாம் தோன்றியதற்குரிய பயனைஅடையும் நாள்.
இரவைப் பாவி என்றது.‘அழுக்காறு எனஒரு பாவி’ (குறள்.168) என்பது
போல.                                                      59

மகளிர் எழுதல்  
1550.
ஐஉறும் சுடர் மேனியான் எழில் காண
     மூளும் அவாவினால்,
கொய்யுறும் குல மா மலர்க் குவைநின்று
     எழுந்தனர் - கூர்மை கூர்

நெய் உறும்சுடர் வேல் நெடுங்கண் முகிழ்த்து,
     நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார் - குழல் வண்டு
     பொம்மென விம்மவே.
     கூர்மை கூர் - கூர்மை மிக்க;  நெய்உறும் சுடர் வேல் - நெய்
பூசப்பட்டஒளிபொருந்திய வேல் போன்ற;  நெடுங் கண் முகிழ்ந்து -
நீண்ட கண்களை மூடிக்கொண்டு; நெஞ்சில் நினைப்பொடும் - மனத்தில்
இராமனைப் பற்றிய எண்ணத்தோடு;  பொய்உறங்கும் மடந்தைமார் -
கள்ளத்துயில் கொண்ட மகளிர்; ஐ உறும் சுடர் மேனியான் - வியப்பைத்
தருகின்ற ஒளிவீசும் திருமேனியையுடைய இராமபிரானது;  எழில் காண -
முடிசூடியபுதிய அழகைக் காண்பதற்கு; மூளும் அவாவினால் -
கிளர்ந்தெழுகின்ற ஆசையினால்;  கொய் உறும் குல மா மலர்க் குவை
நின்று -
கொய்யப்பட்ட சிறந்த பெரிய மலர்த்தொகுதியினால்செய்யப்பட்ட
படுக்கையிலிருந்து; குழல்வண்டு பொம்என விம்ம- இசைப்பாட்டையுடைய
வண்டுகள் பொம்மென்று  ஆளத்திவைக்க;  எழுந்தனர்-.
     ‘நாம விற்கை’ (1545) என்று தொடங்கும் பாடல் தத்தம் கணவரோடு
கூடியிருந்த பெண்கள்விழித்ததைத் தெரிவிப்பது; இப்பாடல்
கன்னிப்பெண்கள் விழித்தெழுந்ததைக் கூறுவது.  இராமனது முடிசூட்டு
விழாவைக் காணும் ஆசை நெஞ்சில் மூண்டெழுவதால் உறக்கம்
வராதிருக்கவும் கண்மூடிக் கிடந்தனர். ஆதலின் அது ‘பொய் உறக்கம்’
ஆயிற்று.  எழில் - மேலும் மேலும் வளர்ந்து சிறக்கும் அழகு. குவை -
ஆகுபெயராய் மலர்களால் ஆகிய படுக்கையை உணர்த்திற்று. குழல்
வண்டு - குழல்போல இசைபாடும்வண்டு. “பொன் பால் பொருவும் விரை
அல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது,  தன்பால் தழுவும்குழல்வண்டு,
தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே”  (3736) என்னும் இடத்தும்
இப்பொருளில்வருதல் காணலாம். பொம்மென - ஒலிக்குறிப்பு.         60