Freitag, 13. April 2018

1.குறுந்தொகை

அ ) "கருங்கால் வேம்பின்  -24 (பரணர் )

24. முல்லை

கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவந்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது
பரணர்

ஆ)"நல்லுரை யிகந்து - 29 (ஒளவையார்)

29. குறிஞ்சி

நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், "இவர் எம்மை மறுத்தார்" என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது
ஒளவையார்

இ )"புனவன் றுடவை  -105 (நக்கீரர்)

105. குறிஞ்சி

புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
நக்கீரர்

ஈ )" நினையாய் வாழி  -343 (ஈழத்து பூதந்தேவன் )

343. பாலை


நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்

அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை-
வெண்கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயருமாறே.

தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது

ஈழத்துப் பூதன் தேவன்


Keine Kommentare:

Kommentar veröffentlichen