Mittwoch, 25. April 2018

3.திருக்குறள் -3

3)வினைத்தூய்மை 

 650
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் 
வேண்டிய எல்லாந் தரும். 

651 
 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 
 நன்றி பயவா வினை. 

652 
 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை  
ஆஅதும் என்னு மவர். 

653 
 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்  
நடுக்கற்ற காட்சி யவர். 

654 
 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 
 மற்றன்ன செய்யாமை நன்று. 

655 
 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க 
 சான்றோர் பழிக்கும் வினை. 

656 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்  
கழிநல் குரவே தலை. 

657 
 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் 
 முடிந்தாலும் பீழை தரும். 

658 
 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
 பிற்பயக்கும் நற்பா லவை. 

659 
 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
 கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

Keine Kommentare:

Kommentar veröffentlichen