Freitag, 4. Mai 2018

3.திருக்குறள் -6

6.தூது 

 680
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் 
 பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 

681 
 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு 
 இன்றி யமையாத மூன்று. 

682 
 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
 வென்றி வினையுரைப்பான் பண்பு. 

683 
 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் 
 செறிவுடையான் செல்க வினைக்கு. 

684 
 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி 
 நன்றி பயப்பதாந் தூது. 

685 
 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
 தக்கது அறிவதாம் தூது. 

686 
 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து 
 எண்ணி உரைப்பான் தலை. 

687 
 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் 
 வாய்மை வழியுரைப்பான் பண்பு. 

688 
 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் 
 வாய்சேரா வன்க ணவன். 

689 
 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
 உறுதி பயப்பதாம் தூது. 

Keine Kommentare:

Kommentar veröffentlichen