Dienstag, 1. Mai 2018

3.திருக்குறள் -5

5)வினைசெயல்வகை 

670
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் 
அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 

671 
தூங்குக தூங்கிச் செயற்பால 
தூங்கற்க தூங்காது செய்யும் வினை. 

672 
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே 
ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.

 673 
வினைபகை என்றிரண்டின் எச்சம் 
நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். 

674 
பொருள்கருவி காலம் வினையிடனொடு 
ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.

 675 
முடிவும் இடையூறும் முற்றியாங்கு 
எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 

676 
செய்வினை செய்வான் செயன்முறை 
அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். 

677 
வினையான் வினையாக்கிக் கோடல் 
நனைகவுள் யானையால் யானையாத் தற்று. 

678 
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
 ஒட்டாரை ஒட்டிக் கொளல். 

679 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் 
குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. 

Keine Kommentare:

Kommentar veröffentlichen