Freitag, 11. Mai 2018

5.சுந்தரர் தேவாரம்

சிபர்ப்பதம்  

 797. 

தனிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறில் அன்றே
குளியீர்உளம் குருக்கேந்திரங்
கோதாவிரி குமரி
தெளியீர்உளம் சிபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறிஉண்
கேதாரம்என் னீரே
.

தெளிவுரை :

 உலகீர், தேவ கோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தால் அன்றோ? இதனை மனத்தில் கொள்ளுங்கள். தெற்கில் உள்ள கோதாவரி, குமரி என்னும் தீர்த்தங்களிலும், வடக்கில் குரு÷க்ஷத்திரத்தில் உள்ள தீர்த்தங்களிலும் சென்று முழுகுங்கள். அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் வடக்கில் திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதியுங்கள்.

இத் திருப்பாடலுள் குமரி முதல் இமயம் வரை யாத்திரை சென்று தீர்த்தங்களில் மூழ்குமாறும் தலங்களை வணங்குமாறும் அருளுகின்றார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen