சிபர்ப்பதம்
797.
தனிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறில் அன்றே
குளியீர்உளம் குருக்கேந்திரங்
கோதாவிரி குமரி
தெளியீர்உளம் சிபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறிஉண்
கேதாரம்என் னீரே.
தெளிவுரை :
உலகீர், தேவ கோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தால் அன்றோ? இதனை மனத்தில் கொள்ளுங்கள். தெற்கில் உள்ள கோதாவரி, குமரி என்னும் தீர்த்தங்களிலும், வடக்கில் குரு÷க்ஷத்திரத்தில் உள்ள தீர்த்தங்களிலும் சென்று முழுகுங்கள். அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் வடக்கில் திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதியுங்கள்.
இத் திருப்பாடலுள் குமரி முதல் இமயம் வரை யாத்திரை சென்று தீர்த்தங்களில் மூழ்குமாறும் தலங்களை வணங்குமாறும் அருளுகின்றார்.
797.
தனிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறில் அன்றே
குளியீர்உளம் குருக்கேந்திரங்
கோதாவிரி குமரி
தெளியீர்உளம் சிபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறிஉண்
கேதாரம்என் னீரே.
தெளிவுரை :
உலகீர், தேவ கோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தால் அன்றோ? இதனை மனத்தில் கொள்ளுங்கள். தெற்கில் உள்ள கோதாவரி, குமரி என்னும் தீர்த்தங்களிலும், வடக்கில் குரு÷க்ஷத்திரத்தில் உள்ள தீர்த்தங்களிலும் சென்று முழுகுங்கள். அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் வடக்கில் திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதியுங்கள்.
இத் திருப்பாடலுள் குமரி முதல் இமயம் வரை யாத்திரை சென்று தீர்த்தங்களில் மூழ்குமாறும் தலங்களை வணங்குமாறும் அருளுகின்றார்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen