40
| 1531. | ‘ “ஒன்றாநின்ற ஆர் உயிரோடும், உயர் கேள்வர் பொன்றா முன்னம் பொன்றினர்” என்னும் புகழ் அல்லால், இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைச்
ஒன்றா நின்ற ஆர்உயிரோடும் - உடலோடு ஒன்று சேர்ந்த அரிய உயிருடனே; உயர் கேள்வர் - தம்உயர்ந்த கணவர்; பொன்றா முன்னம் பொன்றினர் - இறப்பதற்கு முன்னே தாங்கள் இறந்தனர்; என்னும் புகழ் அல்லால் - எனப்படும் கீர்த்தியைக் கொண்டனரேயன்றி; இன்றுகாறும்- இன்றுவரை; தம் இறையோரைக் கொன்றார் இல்லை - தம் கணவரைக் கொலை செய்தவர்இல்லை; கொடியாளே- கொடுமையுள்ளங் கொண்டவே!; நீ கொல்லுதியோ - (அவ்வுலகஇயல்புக்கு மாறாக) நீ (என்னைக்) கொல்லுகின்றாயோ -’ இது முதல் ஐந்து பாடல்கள் ஒரு தொடர். 45 ஆம் பாட்டொடு முடியும். அப்பாட்டில் வரும் தோளான்என்பது இவற்றிற்கு எழுவாய். இன்று ஓர் காறும்; ஒர் - அசை. இதுவரை கணவனைக் கொன்ற மகளிர் இல்லை. நீ கணவனாகிய என்னைக் கொல்லுகின்றாய் ஆதலின்உன்போலக் கொடியவர் உண்டோ என்று தயரதன் கைகேயியை இகழ்ந்தான். பத்தினிப் பெண்டிர்கணவன் இறந்தபின் உயிர்வாழா இயல்பினர் என்று நூல்கள் கூறும். “பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே” (புறம் 246) “தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல், பெருங் கோப்பெண்டும் ஒருங்கு உடன் மாய்ந்தனன்” (சிலம்பு 3:25: 85 - 86) “காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி, ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின், நன்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்” (மணிமேகலை; 2:42 - 48) “தரைமகளும் தன்கொழுநன் உடலம் தன்னைத் தாங்காமல் தன்கரத்தால் தாங்கி விண்நாட்டு அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்” (கலிங்கத்துப் பரணி, 483) “போரில், விடன் ஏந்தும் வேலாற்கும் வெள்வளையினாட்கும் உடனே உலந்தது உயிர்” (புறப்பொருள் வெண்பா மாலை: (262) ஆகியவை காணத்தக்கன. 41
முறை நோக்காய்- நற்குடிப் பிறந்த பெண்ணின் நடைமுறையையும் கருதுவாய் அல்லை; அறம் எண்ணாய் -தருமத்தையும் நினைக்க மாட்டாய்; ஆ என்பாயோ அல்லை - ஐயோ என்று இரங்குவாயும் அல்லை; மனத்தால் அருள் கொன்றாய் - உன் மனத்தில் அருள் என்னும் பண்பையே கொன்றுவிட்டாய்; என் ஆர் உயிர் - என்னுடைய அரிய உயிரையும்; நா அம்பால் உண்டாய் - உன் நாக்காகியஅம்பினால் கொன்றாய்; இனி ஞாலம் பாவம் பாராது - இனி இவ் வுலகத்து மக்களால் (பெண்கொலை)பாவம் என்று பாராமல்; இன் உயிர் கொள்ளப் படுகின்றாய் - உன் இனிய உயிரைக்கொள்ளப்படப் போகின்றாய். பெண்ணிற்குரிய எந்த நற்பண்பும் இல்லாத உன்னை உலகத்தாரே கொன்றொழிப்பர் என்கிறான்.ஏவம் - எவ்வம் என்பதன் விகாரம் மனத்தால் அருள் - உருபு மயக்கம். உண்டாய் - தெளிவு பற்றிவந்தகால வழுவமைதி. 42
மடம் அச்சம்- நாணம், மடம், அச்சம் முதலிய; இவை தம் பூண்பால் ஆக - இவற்றைத் தம்முடையஅணிகலன்களாக; காண்பவர் நல்லார் - கருதுபவர் நற்பெண்டிர் ஆவர்; புகழ் பேணி -புகழை விரும்பி; நாண்பால் ஓரா நங்கையர் - நாணத்தின் தன்மையை அறியாத மகளிர்; தம் பால் நணுகாரே - தம் இனத்தில் சேர்ந்தவர் ஆகார்; ஆண்பாலாரே -(அவர்கள்) ஆண்மக்களே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா - பெண்ணினத்தில் யாரோடுசார்ந்தவர் ஆவார்?’ (ஒருவரோடும் சார்ந்தவர் அல்லர்) பெண்களுக்குரிய சிறந்த பண்புகள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன. உபலட்சணத்தால் பயிர்ப்பும் கொள்ளத் தக்கது. நாணம் - தகாதவற்றின்கண்உள்ளம் ஒடுங்குதல்; மடம் - அனைத்தும் அறிந்தும் அறியாதது போல் இருத்தல்; அச்சம் - என்றும்காணாததைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பு - தன் கணவன் அல்லாதவரின் கைமுதலியன மேற்படின் அருவருத்தல். ஆண்பாலாரே - ஏகாரம் தேற்றம்; நணுகாரே - ஏகாரம் அசை; அம்மா - வியப்பிடைச்சொல். 43
பட்டம் ஏற்று; வலத்தால் - வலிமையாலும்; மதியால் - அறிவினாலும்; வைத்து எண்ணாநின்றார்யாரையும் - மேலாக வைத்துப் போற்றப்படுகின்ற அரசர்கள் எல்லாரையும்; விண்ணோர்காறும்- தேவர்கள் வரையிலும்; எல்லா இகலாலும் - எல்லாப் போரிலும்; வென்ற எனக்கு- வெற்றி கொண்ட எனக்கு; என்மனை வாழும் பெண்ணால் - என் அரண்மனையில் வாழும்பெண்ணினால்; அந்தரம் வந்தது என்னப் பெறுவேனோ - முடிவு நேர்ந்தது என்று சொல்லத்தக்க நிலையை அடைவேனோ!’ வலமும் மதியும் நிறைந்த மன்னர்களை வென்ற எனக்கு அவையில்லாத மனைவியால்முடிவுவந்துவிடுமோ என்கிறான். மனை வாழும் பெண் - மனைவி இகலால் - உருபுமயக்கம். 44
|
Keine Kommentare:
Kommentar veröffentlichen