1541. | எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன - ஏழையால், வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் கண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன காமர் துணைக் கரம் கொண்டு, தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன - கோழியே. |
கடைசியாய் வந்த யாமத்தில்; இயம்புகின்றன கோழி - கூவுகின்றன வாகிய
கோழிகள்; ஏழையால் - அறிவற்றவளானகைகேயியால்;வண்டு தங்கிய தொங்கல் மார்பன்-வண்டுகள் மொய்க்கின்ற மாலையை
அணிந்த மார்பினையுடைய தயரதன்; மயங்கி - அறிவு அழிந்து;
விம்மியவாறு எலாம் கண்டு - புலம்பியவற்றை எல்லாம் பார்த்து; நெஞ்சு
கலங்கி -மனம் கலங்கி; அம் சிறை ஆன - அழகிய சிறகுகளாகிய;
காமர் துணைக் கரம்கொண்டு- அழகிய இரு கைகளால்; தம் வயிறு
எற்றி எற்றி - தம் வயிற்றில் பலமுறை அடித்துக்கொண்டு; விளிப்ப
போன்றன - அழுவன போன்றிருந்தன.
இது முதல் பதினாறு பாடல்களில் வைகறைப் பொழுதில் நிகழும்
நிகழ்ச்சிகள் புனைந்துரைக்கப்படுகின்றன. வைகறையில் இயல்பாகக் கூவும்
கோழிகள் கைகேயியால் துன்புற்ற தயரதனைப் பார்த்து அடித்துக்கொண்டு
அழுவன போன்றிருந்தன என்பது தற்குறிப்பேற்ற அணி. இந்த அணிக்கு,
‘சிறை ஆன காமர் துணைக்கரம் என வரும் உருவக அணி அங்கமாய்
அமைந்தது. கோழி - பால்பகா அஃறிணைப் பெயர். ஏ - ஈற்றசை.
ஒப்பு: | தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரியருள்வாய் - வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம் (நளவெண்பா 280) 51 |
1542. | தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி, மீது எழு புள் எலாம் தேய்கை ஒத்த மருங்குல் மாதல் சிலம்பின் நின்று சிலம்புவ - கேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது ஓர் கேடு சூழ் மா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே. |
மரங்களிலிருந்தும்; மென் சிறை துள்ளி - மெல்லிய சிறகுகளால்
குதித்துக்கொண்டு; மீது எழு புள் எலாம் -வானத்தில் பறக்கின்ற
பறவைகள் எல்லாம்; தேய்கை ஒத்த மருங்குல் - தேய்வு பொருந்திய
சிற்றிடையையுடைய; மாதல் சிலம்பின் நின்று - பெண்களின் பாதச்
சிலம்புகள்போலிருந்து; சிலம்புவ - ஒவிப்பவை; கேகயத்து அரசன்
பயந்த விடத்தை -கேகேய மன்னன் பெற்றெடுத்த விடம்போன்றவளை;
இன்னது ஓர்கேடு சூழ் - இத்தகைய கெடுதியைச்சூழ்ந்து செய்த; மா
கயத்தியை - மிக்க கீழ்மையுடையவளை; உட்கொதித்து - உள்ளம்
புழுங்கி; மனத்து வைவன போன்ற - மனத்திற்குள் ஏசுவனவற்றை
ஒத்திருந்தன; ஏ -அசை.
பறவைகள் விடியற் காலத்தில் ஒலிப்பதைக் கைகேயி செயல்கண்டு
அவளைத்தம் மனத்தினுள் வைவது போலும் என்றார். இது தற்குறிப்பற்ற அணி,
கணவன் உயிரை வாங்கக் காரணமாதலின்‘விடத்தை’ என்றார். கயத்தி -
கயவன் என்பதன் பெண்பால்; கீழ்மையுடையவள். அவள் செயலின்
கொடுமை நோக்கி ‘மா கயத்தி’ என்றார். ஏ - அசை 52
யானைகள் துயில் ஒழிந்து எழுதல்
1543. | சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த இன் துயில் செய்தபின், ‘வாம மேகலை மங்கையொடு வனத்துள், யாரும் மறக்கிலா நாம நம்பி, நடக்கும்’ என்று நடுங்குகின்ற மனத்தவாய், ‘யாமும் இம் மண் இறத்தும்’ என்பனபோல் எழுந்தன - யானையே. |
பாதுகாப்பான கூடங்களில்பொருந்தி; அன்பு திருந்த இன்துயில்
செய்தபின் - இராமபிரானிடத்து அன்பு மிக இனிதுதூக்கத்தைச் செய்த
பின்பு; வாம மேகலை மங்கையொடு - அழகிய மேகலை அணிந்த சீதை
யோடு; யாரும் மறக்கிலா நாம நம்பி - எவரும் மறக்க முடியாத
திருப்பெயரை உடைய இராமபிரான்; வனத்துள் நடக்கும் என்று -
காட்டிற்குச் செல்வான் என்று; நடுங்குகின்ற மனத்தவாய்- வருந்துகின்ற
நெஞ்சையுடையவனவாய்; ‘யாமும் இம் மண் இறத்தும் - நாமும் இந்த
நாட்டைவிட்டுச் செல்வோம்;’ என்பன போல் - என்று கூறுவன போல;
எழுந்தன -கிளம்பின.
யானைகள் எழுந்ததை, இராமபிரான் நாட்டை விட்டுக் காட்டுக்குச்
செல்லப் போவதனால் நாமும்இந்நாட்டைவிட்டுச் செல்வோம் என எழுந்தது
போலத் தோன்றியது என்கிறார். இது தற்குறிப்பேற்றஅணி. சேமம் - கூட்டு
மிடம்; கூடம். வாமம் - அழகு. மேகலை - எண்கோவை மணி. யானை -
பால்பகாஅஃறினைப் பெயர். 53
விண்மீன்கள் மறைதல்
1544. | சிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை, திருமாலை, அக் கரிக் கரம் பொரு கைத்தலத்து, உயர் காப்பு நாண் அணிதற்குமுன் வரித்த தண் கதிர் முத்தது ஆகி, இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்
செங்கண்திருமாலை இராமனை - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இராமபிரானது; கரிக் கரம்பொரு அக் கைத்தலத்து - யானையினது துதிக்கையை நிகர்ந்த அந்தக் கையில்; உயர்காப்பு நாண் - சிறந்த மங்கல நாணை; அணிதற்கு முன் - பூண்பதற்கு முன்னமே; இம் மண் அனைத்தும் நிழற்ற - இவ்வுலகம் முழுவதும் நிழல் செய்யும் வண்ணம்; வரித்ததண் கதிர் முத்தது ஆகி- கட்டின குளிர்ந்த கிரணங்களையுடைய முத்து வரிசைகளையுடையதாய்; மேல் விரித்த - வானத்தில் பரப்பி வேயப்பட்டிருந்த; பந்தர் - பந்தல்; பிரித்தது ஆம் என- பிரிக்கப்பட்டது போல; வானம் - ஆகாயம்; மீன் ஒளித்தது- விண்மீன்களோடு மறைந்தது. வானத்தையே பந்தலாகவும், விண்மீன்களை முத்துச்சரங்களாகவும் கொண்டு, காலையில் விண்மீன்கள்மறைவதைப் பந்தலைப் பிரிக்கையில் முத்துச்சரங்கள் அகற்றப்பெற்றன போன்றிருந்தது என்றார்.இது தற்குறிப்பேற்றம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன், அதற்குரிய தலைவன் வலங்கையில்காப்புக் கயிறு (இரட்சா பந்தனம்) கட்டுதல் மரபு. சிரித்த பங்கயம் - இல்பொருள் உவமை. இராமனை - இராமனுக்கு; வேற்றுமை மயக்கம். 54
மகளிர் எழுதல்
கோதண்டம் ஏந்திய கையையுடையஇராமனை; தொழும் நாள் அடைந்த நமக்கு எலாம் - வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம்அனைவர்க்கும்; காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனது கரும்பு வில்லுக்குத் தோற்றுத்துன்புறுதற்கு இடமான இராப்பொழுது; கரித்தது - நீங்கியது; என்பது கற்பியா -என்பதைத் தெரிவித்துக் கொண்டு; பேரி ஒலித்தன - முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி- அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால்- மலைப் பக்கங்களில் தங்கியமேகம்போல முழங்கியதால்; மாமயில் குலம் என்ன - பெரிய மயில்களின் கூட்டம் எழுந்தாற்போல; மாதர் - மகளிர்; முன்னம் மலர்ந்து எழுந்தனர் - தம் கணவர் எழுவதற்குமுன்னே முகம் மலர்ந்து துயிலினின்றும் எழுந்தனர்; நாமம் - அச்சம். கங்குல் மாலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏ - ஈற்றசை. 55
விரித்து- பல்வகையானபூக்களின் கூட்டங்கள் வாய்விட்டு மலர; வாச இள மாருதம் வீச - நறுமணம் கலந்த இளங்காற்றுவீசுதலினால்; முன் புனை- முன்னே தாம் அரையில் உடுத்தியிருந்த; துகில் கலைசோர - அடையும் மேகலையும் குலைய; நெஞ்சு புழுங்கினார் - மனம் வருந்தினார்கள்; சில கன்னிமார் - மணமாகா மகளிர் சிலர்; மனம் அணுக்கம் விட - நெஞ்சில் உள்ள வருத்தம் தீர; தனித்தனி - தனித்தனியே (ஒவ்வொருவரும்); வள்ளலைப்புணர்- இராமபிரானைச் சேர்வதாகக் கண்ட; கள்ளம் வன் கனவுக்கு - மிக்க வஞ்சனையையுடையகனாவிற்கு; இடையூறு அடுக்க - காற்றினால் தடை பொருந்துதலினால்; மயங்கினார் -திகைத்தனர். தென்றல் வீசுவதனால் காம விருப்பம் மிகக் கணவனைப் பிரிந்த மாதர்கள் புழுங்கினர். திருமணமாகாதபெண் காற்றினால் தூக்கம் கலைந்து கனவு நீங்க, உண்மையறிந்து மயங்கினர். விரித்து -விரிய; செய்தென் எச்சம் செயவென் எச்சமாயிற்று; எச்சத்திரிபு. 56
குமுதங்கள் குவிதல்
|
Keine Kommentare:
Kommentar veröffentlichen