கைகேயி சூழ்வினைப்படலம் (1-66 பாடல்கள் )
கூனியினால் மனம் திரிந்த கைகேயி தன் அலங்காரத்தை அழித்துக் கொண்டு தரையில் கிடந்தாள். இராமன் முடிசூட இருப்பதை அவளுக்குத் தெரிவிக்க வந்த தயரதன் அவளை எடுத்து அவளது துயரத்திற்குக் காரணம் கேட்டான். அவள் அவனிடம் இரு வரங்களைக் கேட்க. அவனும் தருவேன் என்றான். கைகேயி இரு வரங்களைக் கேட்டாள். தயரதன் பெருந்துயர் உற்றான். அவள் காலில் விழுந்து ஒரு வரத்தைப் பெற்று, இராமனைக் காட்டுக்கு அனுப்பும் மற்றொரு வரத்தைக் கேட்காதிருக்குமாறு வேண்டினான். அவள் அதற்கு இணங்க வில்லை. அவன் மண்ணில் விழுந்து புலம்பினான். அவள் வரம் தர மறுத்தால் உயிர்விடுவதாகச் சொன்னாள். அவன் வரத்தை நல்கி மூர்ச்சை அடைந்தான். அவள் செயல் முற்றித் துயின்றாள். இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. இராமன் முடிசூடுவதைக் குறித்து நகர மக்கள் மகிழ்ந்தனர். முடிசூட்டு மண்டபத்துள் அரசர்கள், அந்தணர்கள் முதலியோர் நிறைந்தனர். வசிட்டன் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தான். மன்னனை அழைத்துவரச் சுமந்திரனை அனுப்பினான். அவனிடம் இராமனை அழைத்துவருமாறு சொன்னாள் கைகேயி. அரண்மனைக்குச் செல்லும் இராமனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர். இராமன் அரண்மனையில் அரசனைக் காணாமல் கைகேயியின் அரண்மனை புகுந்தான். அவன் எதிரே கைகேயி வர, அவளை வணங்கினான். அவள், இராமன் காடு செல்ல வேண்டும் என்பது மன்னன் கட்டளை என்றாள். இராமன் மகிழ்ச்சியோடு அவளிடம் விடைபெற்றுக் கோசலையின் மாளிகைக்குச் சென்றான். இப் படலத்தில் இடம் பெறும் விடியற் கால நிகழ்ச்சிகள் பற்றிய பாடல்கள் தற்குறிப்பேற்றஅணி நயம் நிறைந்து கற்பனை வளம்செறிந்து உயர்ந்த கவிதைகளாய்த் திகழ்கின்றன.
போல- அகற்றுபவளைப் போல; அளக வாள் நுதல் - கூந்தலைச்
சார்ந்து அமைந்துள்ள ஒளிபொருந்தியநெற்றியில் உள்ள; பெறல் அரும்
திலகமும் - பெறுதற்கரிய திலகத்தையும்; அழித்தாள்- துடைத்தாள்.
மேகலையை அறுத்தெறிந்தது புகழை வேரொடும் அறுத்தது போலும்
எனவும், நெற்றியில் திலகத்தைஅழித்தது மதியின் மறுவைத் துடைத்தது
போலும் எனவும் கூறினார். இவை தற்குறிப்பேற்றம். திலகத்தின்அருமை
நோக்கி ‘அரும் பெறல்’ என்னும் அடை மொழி தந்தார். அறுத்தென்ன -
தொகுத்தல் விகாரம்.கிண்கிணி - காரணப் பெயர். கிண்கிண் என
ஒலித்தலான்.
2
மற்றும் தா இல் மா மணிக் கலன் - பின்னும் குற்றமற்ற பெரிய
மணிகளால் ஆகியஅணிகளையும்; தனித்தனி சிதறி - வேறு வேறாகச்
சிதைத்தெறிந்து; நாவி ஓதியை -புழுகுநெய் பூசப்பட்ட கூந்தலை;
நால்நிலம் தைவரப் பரப்பி - தரையிலே புரளுமாறு பரப்பிக்கொண்டு
காவி உண்கண் - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள்; அஞ்சனம்
கான்றிட - மைகரைந்து சிந்தும்படி; கலுழா - கண்ணீர்விட்டு
அழுதுகொண்டு; பூ உதிர்ந்தது ஒர்கொம்பு என - மலர்களை யெல்லாம்
உதிர்த்துவிட்ட ஒரு வெறுங்கொம்புபோல; புவிமிசைப்புரண்டாள் -
தரைமேல் விழுந்து உருண்டாள்.
மங்கலப் பொருள்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு அழுத
கைகேயியின்தோற்றம் பின்னே தான் அடையப் போகும் கைம்மை
நிலையை இப்பொழுதே அவள் மேற்கொண்டதைக்குறிப்பாற்
புலப்படுத்தியது நானிலம் - ஈண்டு நால் வகை நிலத்தைச் சுட்டாமல்
தரையைச்சுட்டியது. புவி - தரை. அணிகலன்கள் நீங்கிய நிலையில்
மகளிர்க்குப் பூ உதிர்த்த கொம்பைஉவமை கூறுவதை ஆறுசெல் படலத்தில்
என்னும் பாட்டிலும் காணலாம். 3
கேகயன் தனையை - கேகயன் மகளாகிய கைகேயி; நவ்வி வீழ்ந்து
என - மான் விழுந்தாற் போலவும்; நாடகம் மயில் துயின்று என்ன -
ஆடும் இயல்புடைய மயில்ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும்; ‘கவ்வைகூர்தர - துன்பம் மிக; சனகி ஆம்கடிகமழ் கமலத்து அவ்வை -
மணங்கமலும் செந்தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள்; நீங்கும் என்று - அயோத்தியை விட்டு நீங்குவாள்’ என்று கருதி; அயோத்திவந்து அடைந்த - அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த; அம் மடந்தை தவ்வை ஆம் என - அத்திருமடந்தையின்தமக்கையாகிய மூதேவிஎன்னுமாறு; கிடந்தனள் - சோர்ந்து கிடந்தாள்.
ஓடும் மானையும் ஆடும் மயிலையும் கேகயன் மகளுக்கு உவமை
கூறுவது இந்நாள் வரை அவளிடம்இருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது.திருமகள் இருந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என்று கருதிமூதேவி அங்கு வந்து குடிபுகுந்ததுபோலக் கிடந்தாள் என்பது தற்குறிப்பேற்றம். அவ்வை -தாய்; தவ்வை - தமக்கை. 4
ஆழி நெடுங் கை - ஆணைச் சக்கரம் ஏந்தும் நீண்ட கைகளை
யுடைய; ஆளி மடங்கள்அன்னான் - சிங்க ஏறு போன்றவனான தயதன்;
கங்குலின் நாழிகை நள் அடைந்த பின்றை -இராப்பொழுது நடுவை
அடைந்த பின்னர்; வாழிய என்று அயில் மன்னர் துன்ன - ‘வாழ்க’
என்று கூறிக்கொண்டு வேலேந்திய அரசர்கள் பக்கத்தில் சூழ்ந்துவர; யாழ்இசை அஞ்சிய அம்சொல்ஏழை கோயில் - யாழினது ஒலியும் அஞ்சப்பெற்ற அழகிய மொழியையுடைய கைகேயியின் மாளிகைக்கு;
வந்தான் - வந்தடைந்தான்.
மறுநாள் இராமனுக்கு முடிசூட்டுவதற்குரிய விழா எற்பாடுகளைச்
செய்வதில் காலம் கழிந்தமையால்இரவில் காலந் தாழ்த்துக் கைகேயியின்இருப்பிடம் நோக்கி மகிழ்ச்சியோடு தசரதன் சென்றான். ஏழை - பெண்;
பிறர் பேச்சைக் கேட்டு ஆராயாது நடத்தலின் அறிவில்லாதவள் என்னும்
குறிப்பும் புலப்பட வைத்தார். மடங்கல் - பிடரிமயிர் மடங்கியிருக்கப்
பெற்றது; காரணப் பெயர்.
5
மன்னர் வணங்கி வாயிலில் நிற்ப - தன்னுடன் வந்த அரசர்கள்
தொழுது அந்தப்புரவாயிலில் நிற்க; ஆங்கு வந்து - அவ்விடத்தில்
ஓடிவந்து; ஏயின செய்யும் மடந்தைமாரொடுஏகி - கட்டளையிட்ட
வற்றைச் செய்யும் பணிப்பெண்களோடு சென்று; பாயல் துறந்த -
படுக்கையைவிட்ட; படைத் தடங் கண் - வேல் போலும் கூரிய பெரிய
கண்களையும்; மெல்தோள்- மென்மையான தோள்களையும் உடைய; ஆய் இழைதன்னை - கைகேயி; அடைந்த ஆழிமன்னன்- சேர்ந்த அந்தச் சக்கரவர்த்தி (எடுக்கலுற்றான் என அடுத்த பாடலோடு முடியும்)
தசரதன் மாளிகையின் உள்ளே சென்று, தரையிலே அலங்கோலமாகக்
கிடந்த கைகேயியைக் கண்டான்என்பது கருத்து. அந்தப்புரத்தில் அயல்
ஆடவர் செல்ல இயலாதாகலின் மன்னர் வெளியே நின்றனர். ஆயிழை -
பெண் என்னும் பொருட்டாய் நின்றது, கைகேயி அணிகலன்களைத் துறந்து கிடத்தலின்.
6
கூனியினால் மனம் திரிந்த கைகேயி தன் அலங்காரத்தை அழித்துக் கொண்டு தரையில் கிடந்தாள். இராமன் முடிசூட இருப்பதை அவளுக்குத் தெரிவிக்க வந்த தயரதன் அவளை எடுத்து அவளது துயரத்திற்குக் காரணம் கேட்டான். அவள் அவனிடம் இரு வரங்களைக் கேட்க. அவனும் தருவேன் என்றான். கைகேயி இரு வரங்களைக் கேட்டாள். தயரதன் பெருந்துயர் உற்றான். அவள் காலில் விழுந்து ஒரு வரத்தைப் பெற்று, இராமனைக் காட்டுக்கு அனுப்பும் மற்றொரு வரத்தைக் கேட்காதிருக்குமாறு வேண்டினான். அவள் அதற்கு இணங்க வில்லை. அவன் மண்ணில் விழுந்து புலம்பினான். அவள் வரம் தர மறுத்தால் உயிர்விடுவதாகச் சொன்னாள். அவன் வரத்தை நல்கி மூர்ச்சை அடைந்தான். அவள் செயல் முற்றித் துயின்றாள். இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. இராமன் முடிசூடுவதைக் குறித்து நகர மக்கள் மகிழ்ந்தனர். முடிசூட்டு மண்டபத்துள் அரசர்கள், அந்தணர்கள் முதலியோர் நிறைந்தனர். வசிட்டன் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தான். மன்னனை அழைத்துவரச் சுமந்திரனை அனுப்பினான். அவனிடம் இராமனை அழைத்துவருமாறு சொன்னாள் கைகேயி. அரண்மனைக்குச் செல்லும் இராமனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர். இராமன் அரண்மனையில் அரசனைக் காணாமல் கைகேயியின் அரண்மனை புகுந்தான். அவன் எதிரே கைகேயி வர, அவளை வணங்கினான். அவள், இராமன் காடு செல்ல வேண்டும் என்பது மன்னன் கட்டளை என்றாள். இராமன் மகிழ்ச்சியோடு அவளிடம் விடைபெற்றுக் கோசலையின் மாளிகைக்குச் சென்றான். இப் படலத்தில் இடம் பெறும் விடியற் கால நிகழ்ச்சிகள் பற்றிய பாடல்கள் தற்குறிப்பேற்றஅணி நயம் நிறைந்து கற்பனை வளம்செறிந்து உயர்ந்த கவிதைகளாய்த் திகழ்கின்றன.
கைகேயி தன் கோலம் அழித்தல்
கூனி போன பின், குல மலர்க் குப்பைநின்று இழிந்தாள்; சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை,
கூந்தலில் சொருகியிருந்த பூமாலையைக் கைகேயி எடுத்தெறிந்ததுமேகத்தில் நுழைந்த சந்திரனைப்பிதிர்ப்பது போல இருந்தது; தன்மைத்தற்குறிப்பேற்ற அணி. குப்பை - தொகுதி. மலர்க்குப்பை- ஆகுபெயராய்ப்படுக்கையைக் குறித்தது. இழிந்தாள் - முற்றெச்சம். கூந்தலிருந்து மாலையை எடுத்தெறிந்ததுஅவளுக்கு நேர இருக்கும் அமங்கலத்தைக் குறிப்பாய்க்காட்டுகிறது. 1
அறுத்தெறிந்தாள்; கிண்கிணியோடும் வளை துறந்தனள் - பாதக்கிண்கிணியுடனே கை வளையல்களையும் கழற்றி நீக்கினாள்; மதியினில்மறு - சந்திரனிடத்தில்இருக்கும் களங்கத்தை; துடைப்பாள் |
சார்ந்து அமைந்துள்ள ஒளிபொருந்தியநெற்றியில் உள்ள; பெறல் அரும்
திலகமும் - பெறுதற்கரிய திலகத்தையும்; அழித்தாள்- துடைத்தாள்.
மேகலையை அறுத்தெறிந்தது புகழை வேரொடும் அறுத்தது போலும்
எனவும், நெற்றியில் திலகத்தைஅழித்தது மதியின் மறுவைத் துடைத்தது
போலும் எனவும் கூறினார். இவை தற்குறிப்பேற்றம். திலகத்தின்அருமை
நோக்கி ‘அரும் பெறல்’ என்னும் அடை மொழி தந்தார். அறுத்தென்ன -
தொகுத்தல் விகாரம்.கிண்கிணி - காரணப் பெயர். கிண்கிண் என
ஒலித்தலான்.
2
1493. | தா இல் மா மணிக் கலன் மற்றும் தனித் தனி சிதறி, நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பி, காவி உண் கண் அஞ்சனம் கான்றிடக் கலுழா, பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவிமிசைப் புரண்டாள். |
மணிகளால் ஆகியஅணிகளையும்; தனித்தனி சிதறி - வேறு வேறாகச்
சிதைத்தெறிந்து; நாவி ஓதியை -புழுகுநெய் பூசப்பட்ட கூந்தலை;
நால்நிலம் தைவரப் பரப்பி - தரையிலே புரளுமாறு பரப்பிக்கொண்டு
காவி உண்கண் - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள்; அஞ்சனம்
கான்றிட - மைகரைந்து சிந்தும்படி; கலுழா - கண்ணீர்விட்டு
அழுதுகொண்டு; பூ உதிர்ந்தது ஒர்கொம்பு என - மலர்களை யெல்லாம்
உதிர்த்துவிட்ட ஒரு வெறுங்கொம்புபோல; புவிமிசைப்புரண்டாள் -
தரைமேல் விழுந்து உருண்டாள்.
மங்கலப் பொருள்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு அழுத
கைகேயியின்தோற்றம் பின்னே தான் அடையப் போகும் கைம்மை
நிலையை இப்பொழுதே அவள் மேற்கொண்டதைக்குறிப்பாற்
புலப்படுத்தியது நானிலம் - ஈண்டு நால் வகை நிலத்தைச் சுட்டாமல்
தரையைச்சுட்டியது. புவி - தரை. அணிகலன்கள் நீங்கிய நிலையில்
மகளிர்க்குப் பூ உதிர்த்த கொம்பைஉவமை கூறுவதை ஆறுசெல் படலத்தில்
“தாஅரு நாண் முதல் அணி அலால், தகை மே வரு கலங்களை வெறுத்த மேனியர், தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர், பூ உதிர் கொம்பு என, மகளிர் போயினர்” | (2277) |
1494. | நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன, ‘கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. |
என - மான் விழுந்தாற் போலவும்; நாடகம் மயில் துயின்று என்ன -
ஆடும் இயல்புடைய மயில்ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும்; ‘கவ்வைகூர்தர - துன்பம் மிக; சனகி ஆம்கடிகமழ் கமலத்து அவ்வை -
மணங்கமலும் செந்தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள்; நீங்கும் என்று - அயோத்தியை விட்டு நீங்குவாள்’ என்று கருதி; அயோத்திவந்து அடைந்த - அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த; அம் மடந்தை தவ்வை ஆம் என - அத்திருமடந்தையின்தமக்கையாகிய மூதேவிஎன்னுமாறு; கிடந்தனள் - சோர்ந்து கிடந்தாள்.
ஓடும் மானையும் ஆடும் மயிலையும் கேகயன் மகளுக்கு உவமை
கூறுவது இந்நாள் வரை அவளிடம்இருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது.திருமகள் இருந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என்று கருதிமூதேவி அங்கு வந்து குடிபுகுந்ததுபோலக் கிடந்தாள் என்பது தற்குறிப்பேற்றம். அவ்வை -தாய்; தவ்வை - தமக்கை. 4
தசரதன் கைகேயியின் மாளிகைக்கு வருதல்
1495. | நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை, யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில், ‘வாழிய’ என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் - ஆழி நெடுங் கை மடங்கள் ஆளி அன்னான். |
யுடைய; ஆளி மடங்கள்அன்னான் - சிங்க ஏறு போன்றவனான தயதன்;
கங்குலின் நாழிகை நள் அடைந்த பின்றை -இராப்பொழுது நடுவை
அடைந்த பின்னர்; வாழிய என்று அயில் மன்னர் துன்ன - ‘வாழ்க’
என்று கூறிக்கொண்டு வேலேந்திய அரசர்கள் பக்கத்தில் சூழ்ந்துவர; யாழ்இசை அஞ்சிய அம்சொல்ஏழை கோயில் - யாழினது ஒலியும் அஞ்சப்பெற்ற அழகிய மொழியையுடைய கைகேயியின் மாளிகைக்கு;
வந்தான் - வந்தடைந்தான்.
மறுநாள் இராமனுக்கு முடிசூட்டுவதற்குரிய விழா எற்பாடுகளைச்
செய்வதில் காலம் கழிந்தமையால்இரவில் காலந் தாழ்த்துக் கைகேயியின்இருப்பிடம் நோக்கி மகிழ்ச்சியோடு தசரதன் சென்றான். ஏழை - பெண்;
பிறர் பேச்சைக் கேட்டு ஆராயாது நடத்தலின் அறிவில்லாதவள் என்னும்
குறிப்பும் புலப்பட வைத்தார். மடங்கல் - பிடரிமயிர் மடங்கியிருக்கப்
பெற்றது; காரணப் பெயர்.
5
1496. | வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு, ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி, பாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள், ஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன். |
தொழுது அந்தப்புரவாயிலில் நிற்க; ஆங்கு வந்து - அவ்விடத்தில்
ஓடிவந்து; ஏயின செய்யும் மடந்தைமாரொடுஏகி - கட்டளையிட்ட
வற்றைச் செய்யும் பணிப்பெண்களோடு சென்று; பாயல் துறந்த -
படுக்கையைவிட்ட; படைத் தடங் கண் - வேல் போலும் கூரிய பெரிய
கண்களையும்; மெல்தோள்- மென்மையான தோள்களையும் உடைய; ஆய் இழைதன்னை - கைகேயி; அடைந்த ஆழிமன்னன்- சேர்ந்த அந்தச் சக்கரவர்த்தி (எடுக்கலுற்றான் என அடுத்த பாடலோடு முடியும்)
தசரதன் மாளிகையின் உள்ளே சென்று, தரையிலே அலங்கோலமாகக்
கிடந்த கைகேயியைக் கண்டான்என்பது கருத்து. அந்தப்புரத்தில் அயல்
ஆடவர் செல்ல இயலாதாகலின் மன்னர் வெளியே நின்றனர். ஆயிழை -
பெண் என்னும் பொருட்டாய் நின்றது, கைகேயி அணிகலன்களைத் துறந்து கிடத்தலின்.
6
கைகேயியைத் தசரதன் எடுத்தலும்,
அவள் மண்ணில் வீழ்தலும்
அவள் மண்ணில் வீழ்தலும்
1497 | அடைந்து , அவண் நோக்கி, ‘அரந்தை என்கொல் வந்து தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன், மடந்தையை, மானை எடுக்கும் ஆனையேபோல், தடங்கை கள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான். அவண் அடைந்து - அங்குச் சென்று; நோக்கி - கைகேயியின் நிலையைக் கூர்ந்துபார்த்துத் (துணுக்கம் கொண்டு); அரந்தை என் கொல் வந்து தொடர்ந்தது என - துன்பம்யாது வந்து சேர்ந்தது என்று எண்ணி; துயர்கொண்டு சோரும் நெஞ்சன் - வருத்தமடைந்து வாடும் மனமுடையவனாய்; மானை எடுக்கும் ஆனையே போல் - பெண்மானைத் துதிக்கையால் யானையைப்போல; தடங்கைகள் கொண்டு - தன் பெரிய கைகளால்; மடந்தையைத் தழீஇ - அவளைக் கட்டித் தழுவி; எடுக்கல் உற்றான் - தூக்கத் தொடங்கினான்.
மாலையைச் சூடியதயரதனுடைய; ஆவி அன்னாள் - உயிர் போன்ற வளான கைகேயி; நின்று - தன் நிலையில்மாறாது நின்று; தொடர்ந்த - தன்னைத் தழுவ நீண்ட; நெடுங் கை தம்மை நீக்கி -(அரசனுடைய) நீண்ட கைகளை விலக்கி; மின் துவள்கின்றது போல - மின்னற் கொடி துவண்டுவீழ்தல் போல; மண்ணில் வீழ்ந்தாள் - தரையில் வீழ்ந்து; ஒன்றும் இயம்பலள் -ஒன்றும் சொல்லாமல்; நீடு உயிர்க்கல் உற்றாள்- பெருமூச்சு விடத் தொடங்கினாள். தேவியர் மூவரில் கைகேயியை தசரதன் மிகவும் விழைந்தான் என்பது ‘மன்னன் ஆவி அன்னாள்’என்னும் தொடரால் விளங்குகிறது. மன்னன் துயர் கண்டும் அவள் நெஞ்றசு இளகாமல் இருந்தது தோன்ற‘நின்று’ என்றார். வீழ்ந்தாள், இயம்பலள் - முற்றெச்சங்கள். 8
தசரதன் கைகேயியை நிகழ்ந்தது கூறப் பணித்தல்
|
அலங்கள் மன்னன் -மாலையைப் பூண்ட அரசன்; அஞ்சி - அச்சம் உற்று; ‘நிகழ்ந்தது என்னை - நடந்தது யாது; இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார் - இவ்வேழுலகங்களில் வாழ்பவர்களுள்; உன்னைஇகழ்ந்தவர் மாள்வர் - உன்னை இழிவுபடுத்தியவர் எவராயிருந்தாலும் என்னால் கொல்லப்பட்டுஅழிவர்; உற்றது எல்லாம் - நிகழ்ந்தது அனைத்தையும்; சொன்ன பின் - நீகூறிய பிறகு; என் செயல் காண்டி - என் செய்கையைப் பார்; சொல்லிடு - காலந்தாழ்த்தாதுசொல்வாய்;’ என்றான்- என்று சொன்னான். இப்பாட்டு, தயரதன் கைகேயியின் அலங்கோல நிலையினைக் கண்டு, கொண்ட துணுக்கத்தினையும்அவள்மீது கொண்ட காதலால் அவளைத் தேற்ற முயலுதலையும் காட்டுகிறது. என்னால் கொல்லப்படுவர்என்பான் மாள்வர் எனத் தன்வினையால் கூறினான். சொல்லிடு; இடு- துணைவினை. 9
கைகேயி வரம் வேண்டுதல்
அரசனது; வாய்மை கேட்ட மங்கை - சொற்களைச் செவியுற்ற கைகேயி; நெடுங் கணின் கொண்ட ஆலி- நீண்ட கண்களில் கொண்ட நீர்த்துளிகள்; கொங்கை கோப்ப - மார்பில் வீழ(அமுது கொண்டு); ‘என்கண் அருள் உன்கண் ஒக்கின் - உன்னிடத்தில் உள்ள தானால்; பண்டைய - முன்னே எனக்குக் கொடுத்தவற்றை; பரிந்து அளித்தி - அன்புகொண்டுஅளிப்பாய்;’ என்றாள் - என்ற சொன்னாள். இப் பாட்டில் கைகேயி நயமாகப் பேசித் தயரதனது சூளுரையைப் பெறவகை செய்கிறாள். ‘நெடுங்கணின் கொண்ட ஆலி’ என மாற்றில் கூட்டுக. பண்டைய என்றது - சம்பரனோடு போர் நிகழ்ந்தபோது கைகேயி உதவியதற்குத் தயரதன் மகிழ்ந்து கொடுத்த வரம் இரண்டையும் குறித்தது. பண்டைய - பலவின்பால் பெயர். தன் தருத்தை அறிந்தபின்னர் அரசன் அதற்கு உடன்படுதல் அரிதாகலின் ‘பரிந்து அளித்தி’ என்றாள். 10
தசரதன் வாக்குறுதி அளித்தல்
கருத்து உணராதமன்னன் - எண்ணத்தை அறியாத தயரதன்; வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் - மிகுந்தபேரொளியையுடைய மின்னல்போல; மின்ன நக்கான்- விளங்கும்படி சிரித்து; ‘உள்ளம்உவந்துள செய்வேன்- உன் மனம் விழைந்தனவற்றைச் செய்வேன்; ஒன்றும் லோபேன் -அதில் சிறிதும் உலோபம் செய்யேன்; உன் மைந்தன் - நினக்கு மகனும்; வள்ளல் -பெருவள்ளுலுமான; இராமன் ஆணை - இராமன்மேல் சத்தியம்;’ என்றான் -. கைகேயியின் உபாயம் பயன் தந்தது இதனால் கூறப்பட்டது. தயரதன் நகைபிறர் பேதைமையான்எழுந்தது. கைகேயி இந்நாள்வரை இராமனிடம் பேரன்புடையவன் என்னும் உறுதியால் ‘ உன் மைந்தன்இராமன்’ என்றான். கள்ளவிழ் கோதை; அடையடுத்த ஆகுபெயர். லோபம் - வடசொல்; ஈயாமை என்பதுபொருள். |
Keine Kommentare:
Kommentar veröffentlichen