Samstag, 26. Mai 2018

7.கம்பராமாயணம் -2

  11


கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல் 


1502.ஆன்றவன் அவ் உரை கூற, ஐயம் இல்லாள்,
‘தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,
சான்று இமையோர்குலம் ஆக, மன்ன! நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி’ என்றாள்.

     ஆன்றவன் - குணங்களால் நிறைந்த தயரதன்; அவ் உரை கூற -அந்த உறுதிமொழியைச்சொல்ல; ஐயம் இல்லாள் - தன் கருத்து
நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி;‘மன்ன - அரசனே;
தோன்றிய பேர் அவலம்  துடைத்தல் உண்டேல் - எனக்கு
உண்டாகிய பெரிய துன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - தேவர்கூட்டம் சாட்சியாக;  நீ அன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும்  இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.

     தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.

     சான்று - சாட்சி. ஆக - வினையெச்சம். ஈதி - ஏவல் வினைமுற்று. 12

மன்னன் வரமளிக்க இசைதல்

1503.

‘வரம் கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி

இரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால்
பரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு’ என்றான் -
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான்.

     உரம் கொள் மனத்தவள் - வன்மை கொண்ட நெஞ்சத்தையுடைய
கைகேயியின்;  வஞ்சம்ஒர்கிலாதான் - வஞ்சனையை ஆராய்ந்து
அறியாத தயரதன்; ‘வரம் கொள இத்துணை -(யான் கொடுப்பதாகச்
சொன்ன) ‘வரங்களைப் பெற்றுக்கொள்ள இவ்வளவு;  மம்மர் அல்லல்
எய்தி- தடுமாற்றம் தரும் துன்பம் அடைந்து;  இரங்கிட வேண்டுவது
இல்லை - நீ வருந்த வேண்டுவது இல்லை;  என்பால் பரம் கெட -
என்னிடத்துள்ள மனச்சுமை  நீங்கும்படி;  இப்பொழுதேஈவென் -
இப்பொழுதே தருவேன்;  பகர்ந்திடு - சொல்வாய்;’  என்றான் -.

     இயம்பில் மென்மையான கைகேயியின் மனம் கூனியின் சொல்லால்
மாறி இப்பொழுது வன்மைகொண்டிருப்பதால் ‘உரங்கொள் மனத்தவள்’
என்றார்.  கைகேயியின் மீது கொண்ட அதிக அன்பால்அவள் சொற்களில்
உள்ள வஞ்சத்தை ஆராய்ந்து  அறியாதவனாகத் தயரதன் இருந்தமையால்
‘ஓர்கிலாதான்’ என்றார்.  ஒர்தல் - ஆராய்தல்.                     13

கைகேயி கேட்ட இரு வரங்கள்

1504.

‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்

சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் -
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

உண்டாகிய பெரிய துன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - 
தேவர்கூட்டம் சாட்சியாக;  நீ அன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- 
நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும்  இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.
     தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.

                     

தீயவை யாவையினும் சிறந்த தீயாள் - கொடியவை என்று
சொல்லப்படும் எல்லாவற்றிலும்மேம்பட்ட கொடியவளான கைகேயி;  ‘ஏய

வரங்கள் இரண்டின் -
 (நீ) கொடுத்த இரு வரங்களுள்;ஒன்றினால் - ஒரு
வரத்தினால்; என் சேய் அரசு ஆள்வது  - என்மகன் பரதன் நாட்டை
ஆளுதல் வேண்டும்;  ஒன்றால் - மற்றொன்றினால்;  சீதை கேள்வன்
போய் வனம்ஆள்வது  -
 சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை
விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்;எனப் புகன்று - என்று
சொல்லி; நின்றாள் - மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.
     தீயவை - நெருப்பு,  கூற்றுவன்,  நஞ்சு,  பாம்பு  முதலியன ‘சிறந்த’
என்பது கொடிய என்னும்பொருளைத் தரும், ‘நல்ல பாம்பு’  ‘நல்ல வெயில்’
என்பவற்றில் நல்ல என்பது கொடிய என்னும் பொருளைத் தருவது போல,
இத்தகைய கொடிய சொற்களை அஞ்சாது  சொல்லி நிற்றல் இவளையன்றிப்
பிறர்க்கு அரிது    என்பதனால்  ‘புகன்று நின்றாள்’  என்றார்.  ஆள்வது
வியங்கோள் வினைமுற்று.                                      


 14
தசரதன் உற்ற துயரம்
  
1505.நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.


     நாகம் எனும் கொடியாள் -  பாம்பு என்று சொல்லத்தக்க
கொடியவளாகிய கைகேயி;  தன் நாவின் ஈந்த - தனது நாக்கினின்றும்
வெளியிட்ட;  சோக விடம் தொடர -துன்பத்தைத் தரும் சொல்லாகிய
நஞ்சு தன்னைப் பற்றிக்கொள்ள;  துணுக்கம்  எய்தா -நடுக்கம் அடைந்து;
ஆகம் அடங்கலும் வெந்து  அழிந்து - தன் உடல் முழுவதும் வெதும்பிச்
சோர்ந்து; அராவின் வேகம் அடங்கிய - நச்சுப் பாம்பினால் தன் ஊக்கம்
தணியப்பெற்ற; வேழம் என்ன - யானை போல; வீழ்ந்தான் - (தயரதன்
கீழே) விழுந்தான்.
     இதனால் கைகேயியின் சொற்களில் இருந்த கொடுமை  கூறப்பட்டது.
சோக விடம் - உருவகம்.துயர்க் காரணம் சொற்களாதலால் ‘நாவின் வந்த
விடம்’ என்று வேற்றுமையணியாகக் கூறினார்.ஆகம் வெந்து வீழ்ந்தான்’ -
சினை வினை முதலோடு முடிந்தது. அராவின் - இன் ஏதுப் பொருளில்
வந்தது.       

                                             15
1506 



பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான்.


பூதலம் உற்று - தரையில் விழுந்து; அதனில் புரண்ட மன்னன் -அதன்மீது நிலைகொள்ளாதுஉருண்ட அரசனாகிய தயரதனது;
மாதுயரத்தினை - பெருந்துன்பத்தினை; சொல்ல வல்லார்யாவர் -அளவிட்டுச் சொல்ல வல்லவர் யார்? (ஒருவரும் இல்லை);  வேதனை
முற்றிட -
துன்பம் முதிர்ச்சி அடைய;  வெந்து வெந்து - மனம் மிக
வெதும்பி; கொல்லன் ஊதுஉலையில் கனல் என்ன - கருமான்
(துருத்தியால் ஊதுகின்ற உலைக்களத்துத் தீயைப்போல; வெய்து
உயிர்த்தான் - 
வெப்பம் மிக்க பெருமூச்சு விட்டான்.
     இது கவிக்கூற்று, தயரதன் நெட்டுயிர்ப்பின் வெம்மைக்குக் கொல்லனது
உலைக்களம் உவமை. உலைத்தீ ஊதுந்தொறும் மேலெழுந்து  மீண்டும்
அடங்குவது  போல,  மன்னனது வெப்பம் மிக்க உயிர்ப்பு மிக்கும்
அடங்கியும்  நிகழ்ந்தது. வெந்து வெந்து - அடுக்கு மிகுதிப்பொருளைக்
காட்டுவது.  

     
                                            16
1507.உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
சலம் தலைமிக்கது; ‘தக்கது என்கொல்?’ என்று என்று
அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும்.


     நா உலர்ந்தது - (தயரதனுக்கு) நாக்கு வறண்டது;  உயிர் ஓடல்
உற்றது - 
உயிர்போகத் தொடங்கியது;  உள்ளம் புலர்ந்தது - மனம்
வாடியது; கண்கள் பொங்குசோரிபொடித்த - கண்கள் மிகுதியாகக் குருதி
சிந்தின;  சலம் தலைமிக்கது - கவலை மிகுந்தது; அரும் புலன்கள்
ஐந்தும் -
 அரிய ஐந்து பொறிகளும்; தக்கது என்கொல் என்று என்று -செய்யத்தக்கது என்ன என்று எண்ணி  எண்ணி;  அலந்து அலையுற்ற -கலங்கித் தவித்தன.
     இதில் தயரதன் அடைந்த அவல மெய்ப்பாடுகள் கட்டப்படுகின்றன.
கோபத்தால் கண்கள் இரத்தம்சிந்தின. புலன் - ஈண்டுப் பொறிகளைக்
குறித்தது; ஆகுபெயர். ‘அலந்து அலையுற்ற’ என்பதனை ‘அலந்தலைஉற்ற’
என்று கொள்வாரும் உண்டு. அலந்தலை - ஒருசொல்; கலக்கம் என்பது
பொருள்.  சலம் - கோபமும்ஆம்.       


                        17
1508.மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான்.


     ஆவி பதைப்ப - உயிர் பதைக்கும்படி; அலக்கண் எய்துகின்றான்-பெருந்துன்பத்தை உறுகின்ற தயரதன்;  நிலத்தில் மேவி இருக்கும் -தரையில்(சிறிதுபொழுது) பொருந்தி இருப்பான்; நிற்கும் - எழுந்து நிற்பான்;
வீழும் - (மீண்டும்) விழுவான்; ஓவியம் ஒப்ப - சித்திரம்

போல; உயிர்ப்பு அடங்கி ஓயும் - மூச்சு அடங்கி ஒய்வான்;  பாவியை
எதிர் உற்றுப்பற்றி - 
கைகேயியை எதிரே சென்று பிடித்து;  எற்ற -மோத;  எண்ணும் - நினைப்பான்.
     இதனால் தயரதனது கலக்கநிலை உணர்த்தப்படுகிறது. இராமன்மீது
இரக்கமின்றிக் கேடு சூழ்ந்தாளாதலின்கைகேயி பாவி என்று

குறிக்கப்பட்டாள்.  

                                            18
1509.பெண் என உட்கும்;
     பெரும் பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து,
     உயிர்த்து, உலாவும்;
கண்ணினில் நோக்கும் அயர்க்கும் -
     வன் கைவேல் வெம்
புண் நுழைநிற்க உழைக்கும்
     ஆனை போல்வான்.


     வன் கை வேல் - வன்மையான கையினால் வீசப்பட்ட வேல்; வெம்
புண் நுழைநிற்க-
 கொடிய புண்ணில் நுழைவதனால்;  உழைக்கும்
ஆனை போல்வான் - 
வருந்தும்  யானைபோன்றமன்னன்; பெண் என
உட்கும் - 
பெண் என்று கருதிக் கொல்ல அஞ்சும்;  பெரும் பழிக்கு-(கைகேயியைப் பற்றி எற்றுவதனால்) வரக்கூடிய பெரிய பழிச்சொல்லுக்கு;
நாணும் -நாணுவான்; உள் நிறை வெப்பொடு - தன்னுள்ளே மிக்கிருந்ததாபத்தோடு;  உயிர்த்து உயிர்த்து - பலகால் பெருமூச்சு விட்டு;
உலாவும் - அங்கும் இங்குமாக அலைவான்; கண்ணினில் நோக்கும்
அயர்க்கும் -
 (கைகேயியைக்) கண்ணால்  உற்றுப் பார்த்துப் பின்னர்ச்சோர்வான்.

     கைகேயியைக் கொன்றுவிடலாமா என்ற கருதி தசரதன் அதனால் உண்டாகும் பழிக்கு நாணிஅதனைச் செய்யாமல் விடுத்தான். நாணுதலாவது தனக்குப் பொருந்தாத இழிந்த செயலில் மனம் ஒடுங்குதல். முதல் வரம்
கொடும்புண் செய்ய,  இரண்டாவது  வரம் அப்புண்ணில் வேலை எடுத்து
நழைத்தாற்போன்ற மிகுந்த துன்பம் விளைத்தது.         


           19
கைகேயியின் கலங்கா உள்ளம்
1510.கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன்
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு, வெய்துற்று,
உம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது;
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால்.


     கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன் - கட்டுத்தறியில்
கட்டுண்ட மிக்க மதத்தையுடையகளிற்றை யொத்த அரசனாகியதயரதன்;  வெம்பி விழுந்து எழும் விம்மல் - மனம் நொந்து கீழே
விழுந்து  எழுகின்றதுன்ப நிலையினை;  உம்பர் கண்டு - தேவர்கள்
பார்த்து;  வெய்துற்று நடுங்கினர் -மனம் புழுங்கி நடுங்கினார்கள்; ஊழி
பேர்வது ஒத்தது - 
பிரளய காலம் வந்தது போன்றிருந்தது; அம்பு அன
கண்ணவள் உள்ளம் -
 (அந்நிலையிலும்) அம்பு போன்ற கண்களையுடைய
கைகேயியினது  மனம்; அன்னதே - முன்பு இருந்த அதே தன்மையில்
இருந்தது.
     தயரதன் சம்பரனைத் தொலைத்துத் தங்களுக்கு உதவியவன் ஆதலால்
அவனது துன்பத்தைக் கண்டு தேவர்கள்வருந்தினர்.  உலகத்தவர் யாவரும்
வருந்துதலால் ‘ஊழிபேர்வது ஒத்தது’ என்றார்.  அந்நிலையிலும்கைகேயி
சிறிதும் மனம் இளகாமல் ‘உறுதியோடு இருந்தாள் என்று அவளது கொடுமை
குறித்தார். கட்டுத்தறியில்கட்டப்பட்ட யானை போல என்றும் உவமை
வரத்தால் பிணிப்புண்ட தயரதன் நிலையினைக் காட்டுவது,‘ஏ, ஆல் அசை.     


                                                  20
1511.அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்
நஞ்சிலள்; ‘நாண் இலள்’ என்ன, நாணம் ஆமால்;
‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர்
.


     ஐயனது அல்லல் கண்டும் அஞ்சலள் - (தன்) கணவனது
துன்பத்தைக் கண்டும் அவள் அச்சம்கொள்ளவில்லை; உள்ளம் நஞ்சிலள்- மனம் இரங்கவில்லை; ‘நாண் இலள்’ என்ன -‘வெட்கப்படவும் இல்லை’
என்று அவள் நிலையைக் கூற;  நாணம் ஆம் - (சொல்லும்) நமக்கே
வெட்கம் உண்டாகும்; தக்கோர் - சால்புடைய பெரியோர்; ‘பண்டு - தொன்றுதொட்டே;வஞ்சனை - வஞ்சனை என்பது;  மடந்தை வேடம் - பெண்ணுருவம்;’ என்றே -என்று எண்ணியே;  மாதரை - பெண்களை;
தஞ்சு என - பற்றுக்கோடு என்று;  உள்ளலார்கள்- நினையார்கள்.
     பெண்மைக் குணங்கள் யாதுமின்றி இருந்த கைகேயி நிலைபற்றிக்
கூறுவது நாணம் தருகிறது என்கிறார்கம்பர்.  ஐயன் - கணவன், தலைவன்,
நஞ்சிலள் - நைந்திலள் என்பதன்போலி. தஞ்சு - தஞ்சம்என்பதன் விகாரம்.
‘ஆல்’ அசை.                                                

Keine Kommentare:

Kommentar veröffentlichen