பைதிரம் நீங்கு படலம் (1-39பாடல்கள் )
எரோதன் கொடுமைக்கு அஞ்சிச் சூசையும்
மரியாளும் குழந்தைநாதனை எடுத்துக் கொண்டு
சூதேய நாட்டைவிட்டு எசித்து நாட்டிற்குப் பயணம்
மேற்கொண்டதைக் கூறும் பகுதி. பைதிரம் என்பது நாடு.
சூசைக்கு வானவன் கட்டளை -
- காய், - - காய், - மா, - மா, - - காய்
1
களிமுகத்தி னிவையாகிப் பைம்பூ மேய்ந்த கனலொப்பச்
சுளிமுகத்தி னுற்றதுய ருள்ளம் வாட்டித் துகைத்தன்னார்
வளிமுகத்தின் விளக்கன்ன மயங்கி யேங்க வந்தவையான்
கிளிமுகத்தின் கிளவியொடு விரும்பி யிங்கண் கிளக்குகிற்பேன்.
களி முகத்தின் இவை ஆகி, பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப,
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டித் துகைத்து, அன்னார்,
வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை, யான்
கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளக்கு கிற்பேன் :
இவையெல்லாம் மகிழ்ச்சியோடு நடந்த பின், பசுமையான பூவை மேய முற்பட்ட நெருப்புப் போல, சினந்த தன்மையாக வந்தடைந்த துயரம் தம் உள்ளத்தை வாட்டி மிதிக்கக்கொண்டு, சூசையும் மரியாளுமாகிய அவர்கள், காற்றின் முன் இட்ட விளக்குப்போல மயங்கி ஏங்குமாறு நேர்ந்தவற்றை, கிளியினிடம் தோன்றும் இனிய சொல்லோடு நான் இங்கு விரும்பிச் சொல்ல முற்படுவேன்: இப்பகுதி பற்றிய செய்தி, பு. ஏ., மத்தேயு 2 ; 13 - 15 காண்க. 'மடக்கிளி கிளக்கும் புன்சொல்' பாயிரம் 6.
2
பூந்தாமக் கொம்பனையாள் பூத்த பைம்பூ முகைமுகத்திற்
றேந்தாமத் திருமகனேர்ந் தின்னு மெண்ணாள் செலவன்னார்
தாந்தாமக் கடிநகர்கண் டங்க லுள்ளி நாடொறும்பொற் காந்தாமக் கோயில்விழா வணியின் வெஃகிக் கனிசேர்வார்.
பூந் தாமக் கொம்பு அனையாள், பூத்த பைம் பூ முகை முகத்தின்
தேன் தாமத் திரு மகன் நேர்ந்து, இன்னும் எண் நாள் செல,
அன்னார் தாம் தாமக் கடி நகர்க்கண் தங்கல் உள்ளி, நாள்தொறும்,
பொன் காந்து ஆம் அக் கோயில் விழா அணியின் வெஃகிக் கனி சேர்வார்.
ஒளியுள்ள பூங்கொம்பு போன்ற மரியாள், பூக்கும் பருவத்துப் பசுமையான மலர் மொட்டுப் போன்ற முகங் கொண்டு தேன் நிறைந்த மாலை போன்ற திரு மகனைக் காணிக்கையாக நேர்ந்தபின், மேலும் எட்டு நாட்கள் அக்கோவிலுக்குச் செல்ல வசதியாக, அம்மூவரும் ஒளி பொருந்திய மதிற் காவலுள்ள அந்நகரில் தங்க நினைந்து, பொன்னொளி கொண்ட அக்கோவிலுக்கு நாள்தோறும் விழாக் கோலம் காண்பது போன்ற விருப்பத் தோடு இனிதே சென்று சேர்வர். தேன் + தாமம் - தேந்தாமம். ஒளியைக் குறிக்கும் 'காந்தம்' என்ற சொல், 'காந்து' எனக் கடைக்குறையாய் நின்றது.
3
நெஞ்சுபதி கொண்டவரு ளெஞ்சா நீரார் நிறைந்தைந்நாண்
மஞ்சுபதி கொண்டமலை யொத்த பைம்பூ மணிப்புகைசூழ்
விஞ்சுபதி கொண்டமரர் வைகுங் கோயில் மேவியபின்
னஞ்சுபதி கொண்டவுரைத் தூது வானோ னவின்றடைந்தான்.
நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐந் நாள்,
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த, பைம் பூ மணிப் புகை சூழ்
விஞ்சு பதி கொண்டு அமரர் வைகும் கோயில், மேவிய பின்,
நஞ்சு பதி கொண்ட உரைத் தூது வானோன் நவின்று அடைந்தான்.
மேகங்கள் குடி கொண்ட மலை போன்று, பசுமையான மலர் போல் மெல்லிய அழகிய வாசனைப் புகைகள் சுற்றிலும் மண்டும் பதியாகக் கொண்டு வானவர் தங்கும் திருக் கோவிலுக்கு, தம் நெஞ்சில் குடி கொண்ட அருள் என்றும் நீங்காத இயல்புள்ள அம்மூவரும் நிறைவாக ஐந்து நாட்கள் சென்று வந்த பின், ஒரு வானவன் நஞ்சு குடிகொண்ட தூது மொழியைக்கூறியவாறு வந்து சேர்ந்தான் கோவிலை மலையாகவும் புகையை மேகமாகவும் கொள்க. 'உரைத் தூது' என்பதனைத் 'தூதுரை' என மாற்றுக.
4
கான்வயிறார் பூங்கொடியோ னுறங்குங் காலை கதிர்தும்மி
மீன்வயிறா ருருக்காட்டி விண்ணோ னெய்தி விரைக்கொடியோ
யூன்வயிறார் வேல்வேந்த னிளவற் கோற லுள்ளினனீ
தேன்வயிறா ரிப்பதி நீத் தெசித்து நாட்டைச் செல்கவென்றான்.
கான் வயிறு ஆர் பூங் கொடியோன் உறங்குங் காலை, கதிர் தும்மி,
மீன் வயிறு ஆர் உருக் காட்டி விண்ணோன் எய்தி, "விரைக்கொடியோய்,
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவற் கோறல் உள்ளினன்; நீ
தேன் வயிறு ஆர் இப் பதி நீத்து, எசித்து நாட்டைச் செல்க" என்றான்.
தன்னுள் வாசனைநிறைந்த மலர்க்கொடியை உடையவனாகிய சூசை உறங்கிக் கொண்டிருந்த வேளையில், கதிரைப் பொழிந்து, விண்மீனிடத்து நிறைந்து காணும் ஒளி உருவம் காட்டி அவ் வானவன் வந்து நின்று, "வாசனை கொண்ட மலர்க்கொடியை உடையவனே, பகைவரின் ஊனைத் தன்னிடத்துக் கொண்ட வேலை உடைய மன்னன் சிறுவனைக் கொல்ல நினைந்துள்ளான்; எனவே, தன்னிடத்துத் தேன் நிறைந்துள்ள இந்நகரை விட்டு நீங்கி, எசித்து நாட்டிற்குச் செல்வாயாக" என்றான். 'நாட்டிற்குச் செல்க' என்பது, 'நாட்டைச் செல்க' என்று வந்தது உருபு மயக்கம். வேந்தன் - எரோதன், அவன் குழந்தை நாதனைக் கொல்ல நினைந்தது, 25-வது, குழவிகள் வதைப் படலம் காண்க. 5 அழற்குளித்த பைந்தாதோ கண்பாய் வேலோ வகல்வாயுட் புழற்குளித்த செந்தீயோ வுருமோ கூற்றோ பொருவின்றி நிழற்குளித்த வுருவானோன் கொடுஞ்சொற் கேட்டு நெடுங்கடனீர்ச் சுழற்குளித்த மனஞ்சோர்ந்து வளனப் பணியைத் தொழுதுளைந்தான்.
எரோதன் கொடுமைக்கு அஞ்சிச் சூசையும்
மரியாளும் குழந்தைநாதனை எடுத்துக் கொண்டு
சூதேய நாட்டைவிட்டு எசித்து நாட்டிற்குப் பயணம்
மேற்கொண்டதைக் கூறும் பகுதி. பைதிரம் என்பது நாடு.
சூசைக்கு வானவன் கட்டளை -
- காய், - - காய், - மா, - மா, - - காய்
1
களிமுகத்தி னிவையாகிப் பைம்பூ மேய்ந்த கனலொப்பச்
சுளிமுகத்தி னுற்றதுய ருள்ளம் வாட்டித் துகைத்தன்னார்
வளிமுகத்தின் விளக்கன்ன மயங்கி யேங்க வந்தவையான்
கிளிமுகத்தின் கிளவியொடு விரும்பி யிங்கண் கிளக்குகிற்பேன்.
களி முகத்தின் இவை ஆகி, பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப,
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டித் துகைத்து, அன்னார்,
வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை, யான்
கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளக்கு கிற்பேன் :
இவையெல்லாம் மகிழ்ச்சியோடு நடந்த பின், பசுமையான பூவை மேய முற்பட்ட நெருப்புப் போல, சினந்த தன்மையாக வந்தடைந்த துயரம் தம் உள்ளத்தை வாட்டி மிதிக்கக்கொண்டு, சூசையும் மரியாளுமாகிய அவர்கள், காற்றின் முன் இட்ட விளக்குப்போல மயங்கி ஏங்குமாறு நேர்ந்தவற்றை, கிளியினிடம் தோன்றும் இனிய சொல்லோடு நான் இங்கு விரும்பிச் சொல்ல முற்படுவேன்: இப்பகுதி பற்றிய செய்தி, பு. ஏ., மத்தேயு 2 ; 13 - 15 காண்க. 'மடக்கிளி கிளக்கும் புன்சொல்' பாயிரம் 6.
2
பூந்தாமக் கொம்பனையாள் பூத்த பைம்பூ முகைமுகத்திற்
றேந்தாமத் திருமகனேர்ந் தின்னு மெண்ணாள் செலவன்னார்
தாந்தாமக் கடிநகர்கண் டங்க லுள்ளி நாடொறும்பொற் காந்தாமக் கோயில்விழா வணியின் வெஃகிக் கனிசேர்வார்.
பூந் தாமக் கொம்பு அனையாள், பூத்த பைம் பூ முகை முகத்தின்
தேன் தாமத் திரு மகன் நேர்ந்து, இன்னும் எண் நாள் செல,
அன்னார் தாம் தாமக் கடி நகர்க்கண் தங்கல் உள்ளி, நாள்தொறும்,
பொன் காந்து ஆம் அக் கோயில் விழா அணியின் வெஃகிக் கனி சேர்வார்.
ஒளியுள்ள பூங்கொம்பு போன்ற மரியாள், பூக்கும் பருவத்துப் பசுமையான மலர் மொட்டுப் போன்ற முகங் கொண்டு தேன் நிறைந்த மாலை போன்ற திரு மகனைக் காணிக்கையாக நேர்ந்தபின், மேலும் எட்டு நாட்கள் அக்கோவிலுக்குச் செல்ல வசதியாக, அம்மூவரும் ஒளி பொருந்திய மதிற் காவலுள்ள அந்நகரில் தங்க நினைந்து, பொன்னொளி கொண்ட அக்கோவிலுக்கு நாள்தோறும் விழாக் கோலம் காண்பது போன்ற விருப்பத் தோடு இனிதே சென்று சேர்வர். தேன் + தாமம் - தேந்தாமம். ஒளியைக் குறிக்கும் 'காந்தம்' என்ற சொல், 'காந்து' எனக் கடைக்குறையாய் நின்றது.
3
நெஞ்சுபதி கொண்டவரு ளெஞ்சா நீரார் நிறைந்தைந்நாண்
மஞ்சுபதி கொண்டமலை யொத்த பைம்பூ மணிப்புகைசூழ்
விஞ்சுபதி கொண்டமரர் வைகுங் கோயில் மேவியபின்
னஞ்சுபதி கொண்டவுரைத் தூது வானோ னவின்றடைந்தான்.
நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐந் நாள்,
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த, பைம் பூ மணிப் புகை சூழ்
விஞ்சு பதி கொண்டு அமரர் வைகும் கோயில், மேவிய பின்,
நஞ்சு பதி கொண்ட உரைத் தூது வானோன் நவின்று அடைந்தான்.
மேகங்கள் குடி கொண்ட மலை போன்று, பசுமையான மலர் போல் மெல்லிய அழகிய வாசனைப் புகைகள் சுற்றிலும் மண்டும் பதியாகக் கொண்டு வானவர் தங்கும் திருக் கோவிலுக்கு, தம் நெஞ்சில் குடி கொண்ட அருள் என்றும் நீங்காத இயல்புள்ள அம்மூவரும் நிறைவாக ஐந்து நாட்கள் சென்று வந்த பின், ஒரு வானவன் நஞ்சு குடிகொண்ட தூது மொழியைக்கூறியவாறு வந்து சேர்ந்தான் கோவிலை மலையாகவும் புகையை மேகமாகவும் கொள்க. 'உரைத் தூது' என்பதனைத் 'தூதுரை' என மாற்றுக.
4
கான்வயிறார் பூங்கொடியோ னுறங்குங் காலை கதிர்தும்மி
மீன்வயிறா ருருக்காட்டி விண்ணோ னெய்தி விரைக்கொடியோ
யூன்வயிறார் வேல்வேந்த னிளவற் கோற லுள்ளினனீ
தேன்வயிறா ரிப்பதி நீத் தெசித்து நாட்டைச் செல்கவென்றான்.
கான் வயிறு ஆர் பூங் கொடியோன் உறங்குங் காலை, கதிர் தும்மி,
மீன் வயிறு ஆர் உருக் காட்டி விண்ணோன் எய்தி, "விரைக்கொடியோய்,
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவற் கோறல் உள்ளினன்; நீ
தேன் வயிறு ஆர் இப் பதி நீத்து, எசித்து நாட்டைச் செல்க" என்றான்.
தன்னுள் வாசனைநிறைந்த மலர்க்கொடியை உடையவனாகிய சூசை உறங்கிக் கொண்டிருந்த வேளையில், கதிரைப் பொழிந்து, விண்மீனிடத்து நிறைந்து காணும் ஒளி உருவம் காட்டி அவ் வானவன் வந்து நின்று, "வாசனை கொண்ட மலர்க்கொடியை உடையவனே, பகைவரின் ஊனைத் தன்னிடத்துக் கொண்ட வேலை உடைய மன்னன் சிறுவனைக் கொல்ல நினைந்துள்ளான்; எனவே, தன்னிடத்துத் தேன் நிறைந்துள்ள இந்நகரை விட்டு நீங்கி, எசித்து நாட்டிற்குச் செல்வாயாக" என்றான். 'நாட்டிற்குச் செல்க' என்பது, 'நாட்டைச் செல்க' என்று வந்தது உருபு மயக்கம். வேந்தன் - எரோதன், அவன் குழந்தை நாதனைக் கொல்ல நினைந்தது, 25-வது, குழவிகள் வதைப் படலம் காண்க. 5 அழற்குளித்த பைந்தாதோ கண்பாய் வேலோ வகல்வாயுட் புழற்குளித்த செந்தீயோ வுருமோ கூற்றோ பொருவின்றி நிழற்குளித்த வுருவானோன் கொடுஞ்சொற் கேட்டு நெடுங்கடனீர்ச் சுழற்குளித்த மனஞ்சோர்ந்து வளனப் பணியைத் தொழுதுளைந்தான்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen