17 |
மருந்தடக்
கனிமுக மகிழ்ந்து நாயக னருந்தடத் தவர்க்குநல் லருளோ டாசியைத் தருந்தடத் திவர்ந்திருட் புதைத்த சாமத்தாங் கிருந்தடத் தேகுதற் கெழுந்து போயினார். |
மருந்து அடக்
கனி முகம் மகிழ்ந்து நாயகன், அருந் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியைத் தரும் தடத்து இவர்ந்து, இருள் புதைத்த சாமத்து, ஆங்கு இருந் தடத்து ஏகுதற்கு, எழுந்து போயினார். |
கனிந்த முகம் காட்டி மகிழ்ந்து, அரிய பெருமையாய் நல்ல அருளோடு
ஆசியை அவர்களுக்குத் தரும் மாண்பினால் அவர்கள் எழுச்சி கொண்டு,
அங்கிருந்து நெடிய வழித் தடத்திற் செல்வதற்கு இருள் கவிந்த நள்ளிரவில்
எழுந்து போயினர்.
18 |
இருச்சுட ரோன்பட
வீரை யாயிரங் குருச்சுடர் மேனியைக் கொண்ட வானவர் திருச்சுட ரோனெனச் சிறுவன் றாளிணை பருச்சுடர் பாய்ந்துறப் பணிந்து தோன்றினார். |
இருச் சுடரோன்
பட, ஈர் ஐயாயிரம், குருச் சுடர் மேனியைக் கொண்ட வானவர், திருச் சுடரோன் என் அச் சிறுவன் தாள் இணை, பருச் சுடர் பாய்ந்து உறப் பணிந்து தோன்றினார். |
வாய்ந்த ஒளி மேனியைக் கொண்ட பதினாயிரம் வானவர், திரண்ட ஒளி
பாய்ந்து நிலைக்குமாறு, திருச்சுடரோன் எனப்படும் அச்சிறுவனின் இரண்டு
அடிகளையும் வணங்கியவண்ணம் வந்து தோன்றினர்.
'இருஞ்சுடர்' என்பது,எதுகை ஓசைப் பொருட்டு, 'இருச்சுடர்' என
நின்றது.
19 | |||||||||||||
எல்லியல்
படச்சுட ரிரவி றோற்றினார் பல்லியங் கடலொலி படமு ழக்கினா ரல்லியங் குழவியை யளவில் வாழ்த்தினார் கல்லியம் பாத்தொடை கனியப் பாடினார்.
அதனைத் தோன்றச் செய்தனர்; கடலின் ஒலியும் கெடுமாறு பல இசைக் கருவிகளை முழக்கினர்; ஆம்பல் மலர் போல் அழகிய அக்குழந்தையை அளவில்லாது வாழ்த்தினர்; தேன் போன்ற பாடல்களைத் தொடைநயம் கனியப் பாடினர். தொடை - எதுகை; மோனை போன்ற பாடல் உறுப்புக்கள். நாதன் நீங்க நலமெலாம் நீங்கல் - விளம், - மா, - தேமா, - விளம், - மா, - தேமா
தன்பால் கொண்டுள்ள சங்கு ஊதாமலும், தேரோடுபொருந்திய சக்கரம் உருண்டு செல்லாமலும், தெருவிலே வளரும் ஆரவாரம் தோன்றாமலும், ஊரில் காணப்படும் நடமாட்டம் இல்லாமலும் உறங்கிக் கிடந்த நள்ளிரவில் இவர்கள் நீங்கிச் சென்றமையால், அவ்வூர் தன் சிறப்பு வளர்வதற்குக் காரணமான உயிர்போகச் செத்த உடம்பு போன்றது.'அன்றே' - இங்கும், தொடரும் பாடல்களிலும் அசைநிலை : வரி - சங்கைச் சுற்றிக் காணப்படும் கோடு. அது 'புரி' எனப்படும். புரியின் போக்கு நோக்கி, வலம்புரி இடம்புரி எனச் சங்கு இருவகைப்படும். வலம்புரிச் சங்கே சிறப்புக் கொண்டது. 'செத்தவுடம்பு' என்பது, 'செத்துடம்பு' என வந்தது தொகுத்தல் விகாரம். அரவு - அரவம் என்பதன் கடைக்குறை.
அல்லவை - அறம் அல்லாதவை: மறங்கள் - பாவங்கள் நல்வினை - புல்வினை.
இருளைச் செய்யும் இரவின் நடுவே அறக் கடலாகிய ஆண்டவன் நீங்கிச் செல்லவே, அருளும் அன்பும் உணர்வும் அறிவும் அறமும் தவமும் வேதமும் கொடையும் உறுதியும் ஞானமும் பொருளும் புகழும் புலமையும் மற்றுமாக ஒரு நாட்டைப் பொலியச் செய்யும் நலமெல்லாம் போயிற்று. |
Keine Kommentare:
Kommentar veröffentlichen